பக்கங்கள்

வியாழன், 10 டிசம்பர், 2015

ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

பலே, பலே, பாராட்டத்தக்க முடிவு
ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

கருநாடக முதல்வர் சித்தாராமய்யா அறிவிப்பு

பெங்களூரு, டிச.10_ கருநாடக மாநிலத்தில் தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகள் வாயிலாக  அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கள் மக்களிடையே பரவி வருகின்றன. அதற்கு முடிவு கட்டும்வகையில் அம்மாநில அரசு திட்ட மிட்டு வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகளின் மூலமாக  மக்கள்  மூடநம் பிக்கைகளுக்கு அடிமையா வதை அறிந்து, கடவுள் கவலையற்றவராக அறி யப்பட்ட முதலமைச்சர் சித்தாராமய்யா அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை செய்ய முன்வந்துள்ளார்.  மாநிலத்தில் ஏற்கெனவே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவரும்வகையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ஜோ திடம் சார்ந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் கவ லைக்குரியனவாக உள்ளன. ஆட்சேபத்துக்குரிய கருத் துகளைக் கூறுவதும், அதன்மூலம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதும் பரவி வருகின்றன. தொடக்கத் தில் ராசியைக் கேட்டு அதற்கு இலவசமாக ஜோதிடத்தை கூறிவந் தார்கள். இப்போது தொலைக்காட்சி அலை வரிசைகளின் டிஆர்பி ரேட் என்கிற நிகழ்ச்சி பார்வையாளர்கள் எண் ணிக்கையைப் பெருக்கு வதற்காக இயற்கை அழி வுகள், சந்தனக் கடத்தல்கள், அரசியல் வாய்ப்புகள் உள்ளிட்ட பலவற்றை இணைத்துக்கொண்டார்கள். அண்மைக்கால நிகழ்வு களை, பிரச்சினைகளை இணைத்துக்கொண்டு நிகழ்ச்சியை ஜோதிடத்தின் அடிப்டையில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதுபோன்ற ஜோதிடத் தின் அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மக்களை அறிவியலுக்கும், அறிவுக் கும் புறம்பான  வாழ்வுக்கு வழிகாட்டுபவையாக அமைந்துவிடுகின்றன. 2005ஆம் ஆண்டுகளில் ஆறு தொலைக்காட்சி அலைவரிசைகளாக இருந்தவை இப்போது 20 தொலைக்காட்சி அலை வரிசைகளாக இயங்கி வருகின்றன. அவற்றில் சில காலை 6 மணிமுதல் காலை 10.30 மணி முடிய அலைவரிசை ஒளிபரப்பை ஜோதிடர்களிடம் விற் பனை செய்துள்ளன. புகழ் மற்றும் பணம் பெறுவ தற்காக செய்ய வேண்டிய கணிப்புகளைக் கூறுவது, பூஜைகள்குறித்து விளக் குவது என்று அந்த நிகழ்ச் சிகள் இருக்கின்றன என்றார்.
பேராசிரியர் கே.எஸ்.பகவான்
பேராசிரியர் கே.எஸ். பகவான் கூறுகையில், ஜோதிடர்கள் ஜோதிடவி யலை, வானவியல் என்றும் அறிவியல் என்றும் கூறி வருகிறார்கள். சமூகத்தில் மக்களிடையே உள்ள பல்வேறு நிலைகளைக் கொண்டு அதனடிப்படை யில் ஜோதிடர்கள் கணிப் புகளைக் கூறி உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்ப டுத்துகிறார்கள்.  எந்த ஜோதிடராவது சென்னை வெள்ளம்குறித்து கூறி னாரா? ஜோதிடத்தை அரசு தடை செய்வது சரி யானதே. நான் முழுமை யாக ஆதரிக்கிறேன்.
கே.எஸ். சிவராமு
கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டவர்கள் நல அமைப்பின் தலைவர் கே.எஸ். சிவராமு கூறு கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் எப்படியாவது நல்ல நிலை ஏற்படுமா? என்று ஜோதி டர்களை நாடுகிறார்கள். ஆகவேதான் அவர்களில் பலரும் அதுபோன்ற ஜோதிட நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். ஆனால்,  பல தகவல்களின் அடிப் படையில் ஜோதிடம் என்பது ஓர் ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதிலும் வருத்தத்துக்குரியது என்ன வெனில், பெண்கள் உட் பட ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுடன், ஜோதி டர்கள் கூறுவதை கண் மூடித்தனமாக பின்பற் றுகிறார்கள் என்பதுதான்.
கே.என்.சோமாயாஜி
ஜோதிடராக உள்ள கே.என்.சோமாயாஜி என்பவர் கூறுகையில், நான் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன். தாங் களாகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள் பவர்கள் தொலைக் காட்சி களின்  மூலமாக மக்களை மோசமாக வழிநடத்து கிறார்கள். ஜோதிடத்தால் உறுதியாக எதையும் கூறமுடியாது. மாறிமாறி நிகழ்பவற்றை கூறும். வேத அறிவியல் சிலரால் தவ றாகப் பயன்படுத்தப்படு கிறது.  ஜோதிடத்தின்மூல மாக தளர்ச்சியடைந்த ஒருவரை ஊக்கப்படுத்த லாமே தவிர ஊழை மாற்ற முடியாது. தொலைக்காட்சி களும்கூட எளிதில் ஏமாறக் கூடிய மக்களை மேலும் முட்டாளாக்குகின்றன என்பதுதான் கெட்ட வாய்ப்பாகும் என்றார்.
நிரஞ்சன் பாபு
ஜோதிடம்சார்ந்த இணைய பத்திரிகையாசிரி யர் நிரஞ்சன் பாபு என்பவர் கூறுகையில், 5000 ஆண்டு களாக ஜோதிடம் இருந்து வருகிறது. இந்த தடையை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில், ஜோதிடத்தை கடைப்பிடிப்பதற்கும் தடை என்று விரிவுபடுத்தக் கூடாது. தொலைக்காட்சி களில் ஜோதிடர்களின் கணிப்புகள், ஆடை அலங் காரங்கள், தலையிலிருந்து உடல்முழுவதும் கண்ணைப் பறிக்கும்படியாக ஜொலிக் கின்ற நகைககள் ஆகியவை வேடிக்கையாக இருக்கின் றன. இயற்கை பேரிடர் கள்குறித்த கணிப்பில் மக்களிடம் அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். மக்களை ஜோதிட தொலைக் காட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று குறிப்பிட்டார்.
5000 முதல் 50000 அறுவடை
நகரில் உள்ள பிரபல மான ரத்தினக்கல் வியா பாரி ஒருவர் கூறுகையில், வாரத்தில் இரண்டு முதல் மூன்று பேர் எங்களிடம் வருகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஜோதிடர்கள் கூறுகின்ற கல்குறித்து கேட் கிறார்கள். இதுபோன்ற வாடிக்கையாளர்களில் பிரபலமான நட்சத் திரங்கள், அரசியல் வாதிகள் வருகிறார்கள். தொலைக்காட்சிகளின் மூலமாக இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் கூறப் பட்டாலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த நிமிடத் திலேயே அவர்களிட மிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
வரவேற்பு
அடிப்படையே இல் லாத போலியான கணிப்பு களை வழங்கும் ஜோதி டம் சார்ந்த நிகழ்ச்சி களுக்கு தடைபோடக் கூடிய அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களை உளவியல்ரீதியில் அச்சமூட்டி, பார்வையா ளர்களிடம் பின்னர் அதற்கான தீர்வுகளைக் கூறுவதாக கூறுகின்றன. இந்த நிகழ்ச்சிகள்மூலமாக ஜோதிடர்களாக கூறிக் கொள்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு பணம் கொழிக்கின்றது. இந் நிகழ்ச்சிகளை தடைசெய்ய அரசு எடுத்துள்ள முடிவு  பாராட்டுக்குரியது. பார பட்சமின்றி இதைக் கண்டிப்பாக செய்திடவும் வேண்டும். மூடநம்பிக் கைக்கு எதிரான சட் டத்தைக் கொண்டு வரு வதற்கான ஒளிக்கீற்றாக இது அமையும். சிலர் இதில் குழப்பம் விளை விக்கும் கருத்துகளை கூறினாலும், தளர்ந்திடக் கூடாது. எவ்வித பாரபட்ச மும் இன்றி, அரசியல் கண்ணோட்டமின்றி, சிறு பான்மையர் வாக்குவங்கி நோக்கமின்றி அமைந்திட வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.
-விடுதலை,10.12.15

திங்கள், 16 நவம்பர், 2015

சோதிடந்தனையிகழ்!


-சு.அறிவுக்கரசு
’விதியே வாழி! விநாயகா வாழி! பதியே வாழி! பக்தி வாழி! என்றெல்லாம் பாடிய பாரதியார், ஆத்திச்சூடியில் சோதிடந்தனை இகழ் எனக் கூறினார். இராசகோபாலாச்-சாரியாரும்கூட சோதிடம் ஒரு மூடநம்பிக்கையே என்றார். நம் வீட்டு எருமை, கன்று ஈந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தால்கூட, ஜோதிடன் ஜாதகம் கணித்துக் கொடுப்பானே தவிர, இது எருமை சோதிடம் என்று கூறமாட்டான் என்றார் தந்தை பெரியார்.
அண்ணனின் ஜாதகத்தையும் தங்கையின் ஜாதகத்தையும் தந்து, பொருத்தம் பாருங்கள் என்று கூறினால், பத்துக்கு எட்டரைப் பொருத்தம் இருக்கிறது என்றுதான் சோதிடன் கூறுவானே தவிர, உடன் பிறந்தவர்களின் ஜாதகம் இவை என எந்த ஜோசியனும் கூறுவது இல்லை. ஆகவேதான் அதனை இகழ வேண்டும் என்றனர்.
மாறாக, அதனைப் பாடமாக்கி, கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர் என்றால்... இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டது, பி.ஜே.பி. ஆட்சி ஆறாண்டுக் காலம் நடந்தபோது!
ஆர்.எஸ்.எஸ்.காரரான முரளி மனோகர் ஜோஷி கல்வித்துறையைக் கவனித்த அமைச்சராக இருந்தபோது மேடையை அமைத்தார். இந்த அறிவியல் படித்தால் பி.எஸ்.சி. பட்டம் வழங்கப்படும் என ஆணை பிறப்பித்தார். எல்லாரும் எதிர்த்தனர். இது எப்படி அறிவியலாகும் எனக் கேட்டனர்.
பதில் கூற முடியாத முரளி மனோகர் ஜோஷி பணிந்து பேசினார். பி.ஏ. பட்டம் தரப்படும் அதுவும் ஒரு கலை என்ற காரணத்தினால் என்றார். மேல்நாட்டார் ஒருவர் கொலைகூட ஒரு கலைதான் எனக் கூறினார் அல்லவா? கொலை ஒரு கலை அப்பா! என்று மந்திரிகுமாரி திரைப்படத்தில் எஸ்.ஏ.நடராஜன் என்ற நடிகர் கூறும் வசனத்தை கலைஞர் மு.க. எழுதியதைப் படம் பார்த்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.
அதுபோல சோதிடத்தைப் புளுகுக்கலை எனக் கூறினாரோ? இந்தக் கலையைக் கற்றுத் தந்தால் பல்கலைக்கழக மான்யக் குழு (U.G.C.) நிதி கூடுதலாக வழங்கும் என்று தேன் தடவினார். பல்கலைக் கழகங்கள் சில ஈக்களாகச் சிக்கின. அதில் ஒன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்!
நாள், நட்சத்திரம் பார்த்து பிரும்மரிஷி வசிட்டன் ஜோதிடம் கூறியவாறு, ராமன் பட்டாபிஷேகம் நடைபெறவில்லை; காட்டுக்கு அனுப்பப்பட்டான். அக்மார்க் முத்திரை குத்தும் அருகதை பெற்றவன் வசிஷ்டன். அவன் கணித்ததே கவிழ்ந்து போனது கைகேயியால்!
முறைப்படியும் வழக்கப்படியும் ஜாதகப்படியும் அண்ணன் நாடாள முடியாது, தம்பிதான் நாடாள்வான் என்றான் ஜோதிடன். தம்பி துறவு மேற்கொண்டான். அண்ணன் ஆட்சியில் அமர்ந்தான். நிமித்தகன் சொன்னதை மாற்றிக் காட்டினான் சிலப்பதிகாரத்தில்! செங்குட்டுவன் சேரனானதை இளங்கோ அடிகள் அப்படித்தான் பாடினார்! சோதிடத்தைப் பொய் எனக் காட்டி இகழ்ந்த செய்திகளை ஏராளம் சுட்டிக்காட்டலாம்!
கேரளப் பகுத்தறிவாளர் ஏ.டி.கோவூர் 1969இல் விடுத்த அறைகூவலை ஏற்று, சோதிடம் அறிவியல் என்பதை எண்பித்துக்-காட்ட எவரும் முன்வரவில்லையே! பெங்களூர் நகரில் எட்டுக் கூட்டங்களில் பேசி இந்த அறைகூவலை 1978இல் புதுப்பித்தார் கோவூர். இங்கிலீஷில் ஜோசியம் கூறி, ஏடு நடத்திவந்த உலகப் புகழ்(!) பி.வி.ராமன் என்பவர்கூட பெங்களூர்க்காரர்தான். அறைகூவலை ஏற்கவில்லையே!
வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் நாடி ஜோதிடம் கூறிவந்த பூசமுத்து என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து கணக்கில் காட்டப்படாத பல இலட்ச ரூபாய்த் தொகையை அள்ளிப் போனார்கள்.
பசிக்காமலிருக்க வரம் தருவேன், எனக்குப் பழைய சோறு பிச்சை போடுங்கள் என்று ஒருவன் சொன்னதைப் போல என்பார் தந்தை பெரியார். அதைப் போல ஊருக்கு ஜோசியம் சொன்ன ஆள், தனக்கு வருவதை உணரவில்லையே!
காந்தியாரும் இந்திரா காந்தியும் சுடப்பட்டுச் சாவார்கள் என்று எந்த ஜோதிடனும் கூறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் லிங்கனும், கென்னடியும் கொலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க நாட்டு ஜோதிடனும்கூடக் கூறவில்லையே! அங்கேயும்-கூட ஜோசியர்களும் சோதிடமும் இருக்கின்றன. முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்றார் தந்தை பெரியார்.
வானவியல் (Astronomy) என்பது வேறு. சோதிடம் (Astrology) என்பது வேறு. முன்னது அறிவியல். பின்னது பொய்யியல். நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர் வெளிப்படையாக அறிவித்த பிறகும் அங்கேயே பலருக்கு அறிவு வரவில்லை எனும்போது, இந்தியாவில் எப்படி....?
வானவெளியில் ஒன்பது கிரகங்கள் மட்டுமே உள்ளனவா? ஹம்ஃப்ரி என்று பெயர் வைக்கப்பட்ட பத்தாம் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவர 204 நாள்கள் ஆகிறது என்பது உட்படப் பலவற்றையும் கண்டறிந்து உள்ளனர்! இது ஜாதகத்தில் இடம் பெறவில்லை! ராகு, கேது, என்பவை ஆங்கில ஜோசியத்தில் இடம்பெறவில்லையே!
சூரியனைக் கிரகம் என்கிறது சோதிடம். அது நட்சத்திரம் என்பது அறிவியல்! சூரியன் ஏழிலிருந்து ஒன்பதாம் வீட்டுக்குப் போகிறார், ஆறிலிருந்து நாலுக்கு நடக்கிறார் என்கிறது சோதிடம். சூரியன் நகர்வதோ, சுற்றுவதோ இல்லை. நிலையாக நின்று எரிகிறது என்கிறது அறிவியல். பின் எப்படி சோதிடம் அறிவியல்?
சந்திரன் கோள் அன்று! துணைக் கோள்தான். ஆனால், அதனைக் கோள் என்றே கணக்குப் போடுகிறது சோதிடம்! பூமிக்கு ஒரு சந்திரன், செவ்வாய்க்கோளுக்கு இரண்டு சந்திரன், வியாழனுக்கு 16, சனிக்கு 22, யுரேனசுக்கு 15, நெப்டியூன் கோளுக்கு 3 என நூற்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் வானவெளியில் உண்டு. எந்தச் சந்திரன் சோதிடத்தில் சேர்த்தி? நாம் கண்ணால் காணும் சந்திரனை மட்டும் சேர்த்தால் போதுமா?
பூமி ஒரு கோள் (கிரகம்)! பூமியை சோதிடத்தில் கிரகமாகக் கணக்கில் சேர்க்கவில்லையே!
கோள்களின் பார்வை படுகிறது என்கிறது சோதிடம்! எட்டாம் வீட்டில் இருந்துகொண்டு சூரியன் பார்க்கிறான் என்கிறார்கள். அனுகூலப் பார்வை, வக்கிரப் பார்வை என்று பார்வையோ பலவிதம் என்கிறார்கள். பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சூரியன்! 195 நாடுகளுக்கும் ஒரே சாயையும் ஒரே கிரணங்களையும் பதிவு செய்கிறது. நாடே இல்லாத, ஆளே இல்லாத துருவப் பகுதிகளிலும் சூரியக் காற்று சுமூகமாகவே வீசுகிறது. இந்த நிலையில் சூரியப் பார்வையில் வேறுபாடாம்! எப்படி அறிவியலாகும்?
உலகில் அரசியல் நிலையை சுக்கிரன் முடிவு செய்கிறதாம். போர்களைச் செவ்வாய் உண்டாக்குகிறதாம்! தர்மச் செயல்களுக்கு குருவாம்! அதர்மச் செயல்களுக்கு சுக்கிரன், செவ்வாய், ராகு கிரகங்களாம்!
நாடு பிடிக்கும் வெறியும், பேராசைகளும் உலகில் இதுவரை ஏற்பட்ட போர்களுக்குக் காரணிகள். அலெக்சான்டர், செங்கிஸ்கான், தொடங்கி பிஸ்மார்க், முசோலினி, டோஜோ, இட்லர் ஈறாகப் பல சர்வாதிகாரிகளின் மன வக்கிரங்கள், நாடு பிடிக்கும் பேராசைகள் போன்றவையே அரசியலையும் போர்களையும் ஆட்டிப் படைத்தன என்பதே உண்மை! நபர்களின் வக்கரிப்புகளுக்கு நாடு எப்படிப் பொறுப்பு? நாட்டின் ஜாதகம் எப்படிப் பொறுப்பு ஆக முடியும்?
மனிதர்களின் பிறந்த நேரம், கிரக நிலை இதனை வைத்து ஜாதகம் என்று கூறுகிறார்கள்! நாடுகளுக்கு எது பிறந்த நேரம்? இந்தியா எப்போது ஜனித்தது? 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளிலா? நள்ளிரவு 12-_01க்கு அல்லவா? இவர்களது பஞ்சாங்கம் 30 நாழிகைக்கு மட்டும்தானே கணித்து வைத்திருக்கிறார்கள்!
சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள 12 மணிநேர, 30 நாழிகைக்கு மட்டும்தானே! உதயமோ, அஸ்தமனமோ சூரியனுக்குக் கிடையாது. அது, தோற்றப் பிழை! ஆனால், அதனடிப்படையில் எதையோ பிதற்றுவது அறிவியலா?
எவ்வளவோ வாதங்கள் உள. என்றாலும் ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சோதிடப் பித்தலாட்டம் உலகில் இருக்கிறது. தமிழர் பிரித்த நானிலங்களில் மருத நிலத்துக்கு உரித்தான பரத்தமை உலகின் இரண்டாம் மூத்த தொழில் என்கிறார்கள். அப்படியானால் உலகின் மூத்த முதல் தொழில்? சோதிடம்!
சோதிடர்களை நற்செய்தி கூறுவோர் (Soothe Sayers) என்கின்றனர் ஆங்கிலேயர்கள்! இங்கோ, இந்தியாவிலோ, சோதிடர்கள்தாம் எல்லாமுமே! அத்தகைய மடமை ஒழிய வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். கல்விச் சாலைகள் அறிவை வளர்க்க வேண்டும்.
பகுத்தறிவைப் பயன்படுத்திட படிப்போரை ஊக்குவிக்க வேண்டும். சிலகோடி நிதிக்காகப் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாடத் திட்டங்களை ஏற்கக் கூடாது, மறுதலித்திட வேண்டும்! அந்த நாளும் வந்திடாதோ?
-உண்மை இதழ்,15-28.2.15

செவ்வாய், 10 நவம்பர், 2015

சோதிடம் ஓர் அஞ்ஞானமா? விஞ்ஞானமா?



சோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி, இதன் பால் இழுக்கச் சிலர் போடும் நாடகமே. சோதிடத்தைக் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு கணிக்கிறார்கள் என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் தான் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. அக்கிரகங்களின் நிலை மாற்றங்கள், மனிதனைப் பாதிக்காதா? என்பது பலரது சந்தேகமாகும். இக்கேள்வி சற்று விரிவாக விஞ்ஞானத்துடன் அணுக வேண்டியது. முதலாவதாகக் கிரகங்களைப் பற்றிச் சோதிடம் சொல்வதைக் காண்போம்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் உள்ளன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே, சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சோதிடர்கள் கூறுகின்றனர். சோதிடத்தின் அஸ்திவா ரமே கேலிக்கூத்தாய் இருக்கிறது.
சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒரு நட்சத்திரம், நட்சத்திரம் என்றால், ஹைட்ரஜன் வாயுவால் உருவானது. சூரியன்  சுயமாக ஒளியையும், வெப்பத் தையும் உருவாக்க முடியும். கிரகங் களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. ஆக, சூரியனை ஒரு கிரகமாகப் பொய் கூறிச் சோதிடம் கணிக்கிறார்கள். சூரியனை மையமாகக் கொண்டுதான், பல கிரகங்கள் சுற்றி வருகின்றன.
மற்றொரு வேடிக்கை பார்த்தீர்களா? அவர்கள் கூறும் ஒன்பது கிரகங்களில், பூமியே இல்லை என்பதைக் கவனித் தீர்களா? நாம் வாழும் இந்த பூமியின் நிலை  மாற்றங்களை தவிரவா மற்ற கிரகங்களின் நிலை மாற்றங்கள் நம்மைப் பாதிக்கப் போகின்றன. பூமியும் ஒரு கிரகம்தானே? பிறகு ஏன் அதனைச் சேர்க்கவில்லை. ஏன் என ஆராய்ந்தால், விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில் பூமிதான் மையம். அதனைச் சுற்றித் தான், சூரியன் வலம் வருகிறது என நம்பப்பட்டது.
மற்றொரு வேடிக்கை என்னவென் றால், சோதிடக் கிரகங்களில் சந்திரனும் ஒன்று. சந்திரன் கிரகமே இல்லை. அது ஒரு  துணைக்கிரகம் ஆகும். சந்திரன் சூரியனைச் சுற்றி வருவதில்லை. பூமியைத்தான் சுற்றி வருகிறது.  சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதை அறிந்தோம். சந்திரன் துணைக்கிரகம் என்பதை அறிந்தோம். ஆக ஏழு கிரகங்கள். பூமியைச் சேர்ந்தால் எட்டு கிரகங்கள். இந்த எட்டு கிரகங்களில், ராகு, கேது ஆகியவை கிரகங்களே இல்லை என விஞ்ஞானம் கூறுகிறது.
தற்போது விஞ்ஞானம் கூறுகிற கிரகங்களைப் பார்ப்போம்.
பூமி, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, வின்மம், சேண்மம், புளூட்டோ, சாரோன், மேக்மேக், ஹவு மியா, இரிஸ். ஆக, 13 கிரகங்கள் அக்டோ பர் 2011 வரை கண்டறியப்பட் டுள்ளன. இவை அனைத்துமே சூரிய னைத்தான் சுற்றி வருகின்றன. இந்த கிரகங் களை ஏன் சோதிடம் கைவிட்டு விட்டது. அவர்கள் கூறிய கிரகங்களுக்குத்தான் சோதிடத்தில் இடமுண்டா?
சூரியனிலிருந்து இந்தக் கிரகங்கள் பல கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன. இவ்வளவு தூரத்தில் இருக்கக் கூடிய இந்தக் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி பூமியில் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க முடியும்? உண்மையில், இதர கிரகங்களின் நிலை யினால், பூமிப் பந்தில்கூடத் திடீரென்று பெரிய அளவுக்கு மாறுதல்கள் ஏற்படுவ தில்லை. பிறகு, எப்படி தனி மனிதனின் வாழ்வில் அவை புகுந்து, தீர்மானிக்க முடியும்?
ஆயுள் ரேகை, நேர்த்தியாக அமைந் திருந்தால் ஒருவர் ஆயுளுடன் நோய் தொல்லை இல்லாமல், சுக வாழ்க்கை வாழ்வார். பலரிடமும் இந்த நம்பிக்கை ஆழமாய் பதிந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆயுளைப்  பலகாரணி கள் தீர்மானிக்கின்றன. உடல்வாகு, உணவுப் பழக்கம், வேலை முறை, தீய பழக்கம், எதிர்பாராத விபத்து போன் றவை. அத்தோடு சேர்ந்து வாழும் நாட்டின் சுகாதார வசதிகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
மனித வாழ்வின் அனைத்து அம்சங் களும், ஏற்கெனவே கைரேகைகளில் தீர்மானம் ஆகிவிட்டன., என்றால், மனித முயற்சிக்கும், தனி மனித ஆற்ற லுக்கும் அர்த்தமே இல்லாமல் போய் விடும். மனிதனை முடக்கிப் போட முயலுகிற கோரமான நம்பிக்கைகளில், கைரேகை சோதிடமும் ஒன்று, சோதிடர்கள் சூழ்நிலைக்காரர்கள். அதைக் கேட்பவர்கள் சூழ்நிலைவாதிகள்.
நம் வீட்டில் நடந்த சில நிகழ்வுகளை அப்படியே நேரில் பார்த்தது போலச் சொல்லி விடுகிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று சிலர் கேட்கக் கூடும். நியாயமான கேள்வி தான்! பெரும் பாலும் சோதிடம் கேட்கப் போகிறவர் களே, தங்கள் வீட்டில் நடந்ததை, தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உளறி விடுவார்கள். சோதிடரும் இவர்களின் வாயைக் கிளறி வரவழைத்து விடுவார்கள். பிறகு என்ன? ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.
- நன்றி: கலைக்கதிர் பிப்ரவரி 2013
-விடுதலை 30.3.13

ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை


Image result for தாயத்து
ராசி பலனும், தாயத்தும் ஒரு வடிகட்டப்பட்ட மூட நம்பிக்கை கிரக பலன்களையும் ராசி பலன் களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் வடிகட்டப் பட்ட மூட நம்பிக்கையாகும்.   நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப் படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது அறிவுள்ளவர்கள் செய்யும் காரியம் அல்ல. அதை படிப்பதும், அதன்படி நடப்பதும் நம் தலையில் நாமே மண்ணைப் போடுவது போன்றது. ஒவ்வொரு பத்திரிகையி லும் ஒரே ராசி உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான பலன்களைச் சொல்லி எழுதி, இந்தப் போலிகள் கணிசமான காசு  பார்க்கிறார்கள். இந்த சாதாரண விவரங்கள் கூட தெரியாத முட்டாள்கள், இன்றும் இவற்றை நம்பிக் கொண்டு இருக் கின்றார்கள். ராசி பலன் எழுதி வந்த குஷ்வந்தசிங், தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்றும் அது ஒரு வடி கட்டப்பட்ட பொய் என்றும் அடித்துக் கூறி உள்ளார். பொருந் தாத எதிர்பார்ப்புகள்
சிலர் தாயத்துகள், கயிறுகள், வளையங்கள் பேன்றவற்றை அணிந்து கெள்கிறார்கள் அல்லது தங்களது பிள்ளைகளுக்கு அணிவிக்கிறார்கள். சிலர் தங்களது கை, கழுத்து, இடுப் பில் அவைகளை கட்டிக் கொள் கிறார்கள். சிலர் சில கற்களை ராசிக் கல் என்று கூறி அதை மோதிரங் களில் பதித்து அணிகிறார்கள். இவ்வகையான அனைத்துச் செயல்களும் அறிவுக்குப் பொருந்தா என்பதை நாம் உணர வேண்டும்.
ஒரு  ரூபாய் கூடப் பெறாத தாமிரத் தகடுகளில் ஏதேதோ கிறுக்கி எழுதி, ஆயிரக்கணக்கில் இப்பொ ழுது பலரும் சம்பாதித்து வரு கிறார்கள். இதற்கு என்று டிவியிலும் பத்திரிகைகளிலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து, இந்த ஏமாற்றுத் தொழிலில் லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக்  கொண் டாட்டம்தான்.
பிள்ளையாரின் விலை?
இந்துக்களால் மதித்து வணங்கப் படும் பிள்ளையாரை ஒரு சாமி சிலைகள் செய்து விற்கும் நிறுவனத் தில் விலைப் பட்டியல்
இதோ!
1. வைரப் பிள்ளையார்         ரூ.1.25 லட்சம்
2. தங்கப் பிள்ளையார் ரூ. 80,000
3. வெள்ளிப் பிள்ளையார்    ரூ. 20,000
4. செம்புப் பிள்ளையார் ரூ. 1,200
5. மற்ற உலோகங்களில்    ரூ. 300
6. பிள்ளையார் படங்கள் ரூ 125
7.  லித்தோ படங்கள் ரூ. 45
8. நல்ல பேப்பரில்  ஜெராக்ஸ்       செய்யப்பட்டது  ரூ.3  * கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
ஆக  மொத்தத்தில் பிள்ளையா ருக்கு அல்ல, அவர் செய்யப் பட்ட உலோகத்திற்குத்தான் மதிப்பு உள்ளது என்பதே உண்மை.
எப்படியோ நகை வியாபாரிகளுக் குக் கொண்டாட்டமே!
-விடுதலை ஞா.ம.23.3.13

திங்கள், 9 நவம்பர், 2015

கிரகங்களால் பாதிப்பு ஏற்படுமா?


பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்
1. புதன்    - 5 கோடியே 70 லட்சம் மைல்
2. வெள்ளி (சுக்கிரன்)    - 2 கோடியே 60 லட்சம் மைல்
3. செவ்வாய் 4 கோடியே 85 லட்சம் மைல்
4. வியாழன் (குரு) 39 கோடியே 3 லட்சம் மைல்
5. சனி 79 கோடியே 31 லட்சம் மைல்
6. யுரேனஸ் - 169 கோடியே 40 லட்சம் மைல்
7. பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் - 9 கோடியே 30 லட்சம் மைல்
8. பூமிக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரம் - 2 லட்சத்து நாற்பதாயிரம் மைல்
எல்லா கிரகங்களும் சூரியனை மய்யமாக வைத்து நீள் வட்டப் பாதை யில் சுற்றி வருவதால் கிரகங்களின் தூரம் சற்று வேறுபடக் கூடும்.
கிரகங்கள் எல்லாம் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை பூமியை நோக்கி குறிப் பிட்ட தூரம் வரை மட்டுமே இருக்கும். ஆகையால் அந்த ஈர்ப்பு விசை பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே, பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்கள் எந்த மாற்றத்தையோ, ஏற்றத்தையோ உண்டாக்குவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை.
பலன்கள் மனிதனுக்கு தானாகவே ஏற்படுவதா? அல்லது உழைப்பினால் ஏற்படுவதா? கிரகத்தின் தன்மையால் ஏற்படுவதா? அல்லது முன் ஜென் மத்தில் செய்த கருமத்தின் பலனாய் ஏற்படுவதா? பகவத் கீதையில் முன் ஜென்மத்து பலனுக்கேற்ப நம்முடைய வாழ்வில் செயல்கள் எல்லாம் தலைவிதியின்படி நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அந்த தலைவிதியை படைத்த அந்த கடவுளாலே கூட இதை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. (கீதை, அத்யாயம் -_ 4, சுலோகம் _ 13, அத்யாயம் _ 3, சுலோகம் _ சுலோகம் _ 35) எனவே பூசைகள் செய்து பலன்களை மாற்ற முடியும் என்பது அடிபட்டு அறுத்துப் போய்விடுகிறது. ஏன் இந்த முரண் பாடுகள்? ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்கள் காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த் தம் உண்டா?
பூமியின் ஈர்ப்பு விசையில் 6இல் 1 பங்குதான் (1/6) துணைக்கிரகம் சந்திரனுக்கு இருக்கிறது. அதுபோலவே மற்ற கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும். துணைக் கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில மாறுதல்கள் பூமியில் உள்ள கடல் நீருக்கு சில சமயங்களில் ஏற்படலாம்.
2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி செவ்வாய்க் கிரகம் பூமிக்கு அருகில் வந்தது. பூமியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை! சனிக்கிரகம் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பூமிக்கு அருகில் வந்தது. பூமியைவிட 7.55 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம் காலத்தில் தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தன. சோதிடர்கள் செவ் வாய் தோஷமென்றும், சனி தோஷ மென்றும் நம்மிடத்தில் கூறியதை நினைவுபடுத்திப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு செயல்படுவதே வாழ்வில் சிறந்த வழியாகும். தோஷம் என்பதெல்லாம் மோசம்.
ஜோதிடர்கள் சென்ற ஆண்டு 21.12.2012, உலகம் அழிந்து விடும் என்று ஊடகங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தி வந்தனர். ஆனால் ஒன்றுமே பூமிக்கு கேடு ஏற்படவில்லை என்பதை எல்லோரும் அறிவோம். மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டு, பூமி சுற்றும், உலகம் வாழும் என்பது நிறுவிக்கப்பட்டது.
கிரகங்கள் பூமியில் இருக்கும் மனி தர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், பெண் கருவுற்று அவள் வயிற்றில் புதிய உயிர் ஏற்படும் போது அந்தக் குழுந்தையின் முன் வினைப்படி எல்லா பாதிப்புகளையும் கிரகங்கள் உருவாக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பிறகு ஏன் பத்து மாதங்கள் காத்திருந்து குழந்தை தாய் வயிற்றை விட்டு பிரிந்த உடனேயே காவல்துறை ஒரு குற்றவாளியைப் பிடிக்க முற்படுவது போல் கிரகங்கள் வானத்தில் இருந்து கொண்டு அந்தக் குழந்தையைத் தாக்கி பாதிப்பைக் கொடுக்கின்றன? பல கோடி மைல் தூரத்திலுள்ள கிரகங்கள் மனிதர்களைப் பாதிக்கிறது என்ற வாதத்தை தகுந்த ஆதாரமில்லாமல் எப்படி நம்புவது?
ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைத்தது என்று சந்தோஷப்படுவது சிறந்ததா? அல்லது சோதிடம் பார்த்து குழந்தை யின் பிறப்பால் குடும்பத்தில் தாய் மாமனுக்குக் கெட்டது ஏற்படும். தாய் தந்தையருக்கு நோயைக் கொடுக்கும். குடும்பத்தில் சிக்கல் ஏற்படும் என்று குழப்பமடைந்து பொருளற்ற பரிகார பூசை செய்து துன்பப்படுவது சிறந்ததா? இவை இரண்டில் எது சிறந்தது என்று அறிவின்பால் சிந்தித்து முடிவெடுப்பது உங்களிடமே விடப்பட்டுள்ளது.
பெண்ணின் ஜன்ம நட்சத்திர பலன், ருதுப்பலன், திருமணப் பொருத்தம், ஜோதிட பலன் கிரகங்களின் பாதிப்பு ஆகியவைகளைப் பற்றி சிறந்த சோதி டர்கள், அறிவியலாளர்கள், ஊடகத் தார்கள் முதலானோர் எடுத்துரைத்த கருத்துக்களை இங்கு பார்த்தோம். சோதிடர் கூறும் கோட்பாடுகளை வேறு மதத்தவர்கள் நம்புவதில்லை. அவர்கள் என்ன சீர்கெட்டா போய் விட்டனர்? இனி இந்து மதம் பெண் களின் பிறப்பைப் பற்றி என்ன கூறு கிறது என்பதைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
பிரம்மசூத்திரம், சிறீபாஷ்யம்
இந்து மதத்தின் பெருந்தலைவர் களில் ஒருவரான இராமானுஜர் விசிஷ்ட்டாத் வைதம்) பிரம்ம சூத்திரத் திற்கு தான் எழுதிய உரையின் சிறீபாஷ் யம்) முகப்பிலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.
பகவத் பலன தானக் ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்மசூத்ரா வ்விருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்டிபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே
அதாவது
பூர்வாச்சாரியார்கள், அதாவது பிரம்ம சூத்திரத்தைப் பண்ணிய ஆச் சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் (இராமானுஜர்) இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும் என்று முன்னோர்கள் மொழிந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார் இராமானுஜர்.
பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய சிறீபாஷ்யத்தின் (உரையின்) அபசூத்ராபிஹாரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்:
பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர் களுக்குத்தான் மோட்சம். நான் சொல் வது பிராமணர்களுக்கு மட்டும்தான். பிராமணர் அல்லாத சூத்ரர்கள் மோட்சம் வேண்டுமென்றால் இந்தப் பிறவியை இப்படியே கழித்து அடுத்த ஜென்மாவில் பிராமணனாகப் பிறக்க பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். ஒரு வேளை, அடுத்த பிறவியில் பிராமணனாகப் பிறக்க அவர்களுக்குப் பிராப்தம் கிடைக்குமானால், வேத, உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.
அதுபோலவே, பிராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள்தான். எனவே, அவர்கள் அடுத்த ஜென்மாவில் பிராமண புரு ஷனாக அதாவது பிராமண ஆணாக அவதரித்தால்தான் மோட்சத்திற்குப் பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும் என்கிறார் இராமானுஜர்.
மோட்சமென்றால் அடுத்த ஜென் மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண் டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுப விப்பது (அக்னி ஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சாரியார் - _ இந்து மதம் எங்கே போகிறது என்ற நூல் _ நான்காம் பதிப்பு பக்கம்: 126-_127).
மூடத்தனத்தை முறியடிப்போம்
பெண்கள் மீதான வன்புணர்ச்சிக்குக் காரணம் கிரகப் பலன் என்று கூறுவது எவ்வளவு மூடத்தனம். மதம், ஜாதி, வேதங்கள், சாத்திரங்கள் ஆகிய அனைத்துமே பெண்களை அடக்கி, ஒடுக்கி வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதையே இந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள் ளது. பெண் விடுதலைக்கு பாடுபடும் அமைப்புகள், அனைத்துமே தங்களின் மனச்சாட்சியை விழிப்படையச் செய்து இந்தக் கொடுமையை வெகு விரைவில் சமூகத்திலிருந்து துடைத்தெறிய முன்வர வேண்டும்.
வெறும் பெண் உரிமை பேசுவதும் இடஒதுக்கீடு அளிப்பதும் இந்தக் காலகட்ட சூழ்நிலைக்குப் போதாது. பெண் இழிவினை முதலில் போக்க ஆவன செய்ய வேண்டும். காலம் வெல்லும் என்று காத்திருக்கக் கூடாது.
மனிதனால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கை சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறது என்பது ஆதாரத்துடன் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் திறந்த மனதுடன் (With Open mind) செய்திகளை ஊன்றிப் படித்து உண்மைகளை உணர வேண்டும். இந்த உலகில் நம் நாட்டைத் தவிர,  வேறு எந்த நாட்டிலும் இல்லாத, இந்த மூடத்தனம் நமக்கு தேவைதானா?
ஜோதிடம் பொய்; உண்மை என்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று கர்நாடக விச்சாரவாதி சங்கம், பெங்களூரு - _ சவால் விட்டு பல ஆண்டுகள் ஆகியும், சால்வை தைரியமாக சந்திக்க எந்த ஜோதிடரும் இன்று வரை முன் வரவில்லை, ஏன்? ஜோதிடர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றே கருத வேண்டி இருக்கிறது.
- பேரா. ஏ.எஸ். நடராஜ்
-விடுதலை ஞா.ம.20.7.13

ஞாயிறு, 1 நவம்பர், 2015

சோதிடம் - அறிவியலல்ல!


விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.
நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை  உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.
இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன
என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.
நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும்.  தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,
பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?
மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!
நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
-viduthalai,1.11.13

செவ்வாய், 21 ஜூலை, 2015

குருபெயர்ச்சியா? ஜாதிப் பயிற்சியா?



ஜூன் 13 2014 (தி.ஆ.2045 விடை -_ 30) வைகாசி 30ஆம் தேதி என்னும், ஜூபிடர் என்னும் குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறது. இது வாக்கியப் பஞ்சாவ்கம் தரும் தகவல் ஜூன் 19 - _ 2014 (தி.ஆ. 2045 ஆடவை - _5) ஆனி 5ஆம் நாள் வியாழன் என்னும், ஜூவிடர் என்னும், குருப்பெயர்ச்சி மிதுன இராசியில் இருந்து கடக இராசிக்கு மாறுகிறதாம் - இது திருக்கணித பஞ்சாங்கம் தரும் தகவல்.
பஞ்சாங்கத்துக்கு பஞ்சாங்கம் முரண்பாடு, ஆனால் அறிவியலில் இல்லை முரண்பாடு. அறிவியலில் எல்லாமே சமன்பாடுதான்.
வியாழன் கோள் சூரியனைச் சுற்றி வர, பூமியின் கணக்கில் ஏறத்தாழ 12 ஆண்டுகள்ஆகின்றன. நமது பூமி சூரியனைச் சுற்றிவர ஒரே ஆண்டு ஆகிறது. உண்மையில் வியாழனுக்குப் பின்னால் தெரியக் கூடிய விண்மீன் மண்டலக் காட்சியானது பூமியின் பெயர்ச்சியாலேயே மாறித் தெரிகிறது. பூமியில் நாம் பார்க்கும் எல்லா காட்சி மாற்றத்திற்கும் பூமியின் சுழற்சியும், பெயர்ச்சியுமே உண்மையான காரணம். அதுவும் மற்ற கோள்களின் பின்புலம் (இராசி) மாறுவதற்கும் பூமியின் பெயர்ச்சியே காரணம். அப்படியிருக்கும்போது குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை ஆராயாமல் வெளியிடுவது, கோவில் குருக்களின் வயிற்றை நிரப்பவே! அதற்குத்தான் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையும், கட்டணமும்.
எல்லாக் கோள்களும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுதான் சூரியனைச் சுற்றி வருகின்றன. அப்படி இருக்க சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி எனக் கூறும் ஆன்மிகம், சனி சுழற்சி, குரு சுழற்சி பற்றி சொல்வதில்லையே. அதிலும் நவக்கிரகம் என்று கூறும் (இப்போது 8 கோள்களின்) ஆன்மிகம், புதன் பெயர்ச்சி வெள்ளிப் பெயர்ச்சி பூமிப் பெயர்ச்சி, செவ்வாய்ப் பெயர்ச்சி, வின்மம் (யுரேனஸ்) பெயர்ச்சி, சேண்மம் (நெப்டியூன்) பெயர்ச்சி பற்றி சொல்வதே இல்லையே... ஏன்? ஏன் எனில் கிரகத்தில்கூட உயர் ஜாதி கிரக மாம் இதோ மாலை முரசு தரும் தகவல்.
குரு சில தகவல்கள் கிழமை    வியாழன்
நட்சத்திரம்    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி    தனுசு, மீனம்
பால்    ஆண்
நட்பு    சந்திரன், செவ்வாய், சூரியன்
பகை    புதன், சுக்கிரன்
சமம்    சனி, ராகு, கேது
கோத்திரம்    ஆங்கிரசு
அதிதேவதை    இந்திரன்
பிரத்யதி தேவதை    பிரம்மா
குணம்    சாத்விகம்
திசை    வடக்கு
மொழி    வடமொழி
சாதி    பிராமண சாதி
ஆடை    தங்க மஞ்சள்
மனைவியர்    தாராதேவி, சங்கினி
புதல்வர்கள்    எமகண்டன், கசன், பரத்வாஜன்
ஊர்தி    யானை
தசை    16 ஆண்டு
மலர்    முல்லை
தானியம்    கடலை
உணவு    தயிர்ச் சோறு
உலோகம்    பொன்
-விடுதலை ஞா.ம.19.7.14 ப8

திங்கள், 20 ஜூலை, 2015

ராசியும் வானியலும்


ஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.
மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.
விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.
இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.
பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.
வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.
சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.
இந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.
ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.
ஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.
உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.
மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.
அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.
ராசிகள் உருவானது எங்கே?
இந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.
வராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.
2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.
சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)
சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?
தி. வெங்கடேஸ்வரன்
விடுதலை,14.8.10

ஞாயிறு, 19 ஜூலை, 2015

ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!

ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!



மிகப்பழங்காலத்தில் வானவியல் பற்றிய சரியான உண்மைகள் தெரியாத போது உருவானதுதான் ஜோதிடம். அது அந்தக்காலத்து அறிவு. அவ்வளவுதான் அதற்கு மரியாதை. ஆனால், அதையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் எப்படி? மாற்றம் என்பதுதான் மாறாதது. இதற்கு நேர் எதிர்மறையா னதுதான் மதங்கள். ஆனால், கிறித்துவ மதத்தில் சில மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. போப் ஜான் பால் மிமி கலிலியோவுக்கு கிறித்துவ மதம் இழைத்த கொடுமைக்கு வெளிப்படை யாக மன்னிப்பு கேட்டதும், இப் போதிருக்கிற போப் அதற்கு ஒரு படி மேலே சென்று உருமலர்ச்சி கொள் கையை ஏற்றுக்கொண்டதும், மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை எண்பித்துள்ளது. ஆனால், ஹிந்து மதம்; சனாதன மதம்; வேதமதம் என்கிற பார்ப்பன மதம் மட்டும் மாறாமல் அதே காட்டுமிராண்டி காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அதில் ஒரு கூறுதான் இந்த ஜோதிடம்.
இந்த தனி உரிமை, தனி உடைமை சமுதாய அமைப்பில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை. வாழ்வு நிலையில் பல்வேறு சிக்கல்களில் குடும்பம் சிக்குண்டு இருப்பதும் இயல்புதான். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பலகீன மனம் உடையோர்தாம் இந்த ஜாதக மோசடி செய்வோரின் மூலதனம். இல்லாத கோள்களை இருக்கிறது என்றும், இருக்கும் கோள்களை இல்லை என்றும் ஜோதிடத்தில் கூறுகிறார்கள்.
முக்கிய மாக பூமியே இவர்கள் ஜோதிடத்தில் இல்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது நமக்கு. சிரிப்புகூட வந்துவிடுகிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டுதான் மக்களின் வாழ்க்கையோடு விளையாடு கிறார்கள். ஜாதகக் கணிப்பில் ஒரு விநாடி தவறினால்கூட கணிப்புத் தவறும் என்கிறார்கள். சில நட்சத்திரங்களில் இருந்து நமக்கு ஒளி வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். வீனஸ் என்ற கோளின் உண்மை நிலைக்கும், நமக்குத் தெரியும் நிலைக்கும் இடையில் ஆறு நிமிட நேர வேறுபாடு இருக்கிறது. அதாவது வீனஸ் என்று நாம் பார்ப்பது ஆறு நிமிடத்திற்கு முந்தைய தோற்றம். அதே இடத்தில் இப்போது தெரிவது வேறொரு நட்சத்திரம். இப்படி இருக்க இவர்கள் அந்த நட்சத்திரங்களை வைத்து பூமியில் உள்ள மனிதர்களுக்கு இராசி பலன் பார்க்கிறார்கள்? தந்தை பெரியார் பிறந்த காலம் என்பதைப்பற்றி அன்று கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்றுமே எவருமே பதில் சொன்னதில்லை.  அதுமட்டுமல்ல, இந்த இராசி பலனில் சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு இடமே கிடையாது. இது ஒன்றே போதும் ஜோதிடம் என்பது ஆரிய பண்பாட்டின் ஊடுருவல் என்பதற்கு சான்று.
கர்நாடகா அரசு இந்த மோசடிகளை வெளிப்படையாகவே கண்டித் திருக்கின்றது. ஆனாலும் ஜோதிடத்தை பள்ளிகளிலும், கல்லூரி களில் பாடமாக்கத் துடிக்கும் மத்திய அரசுதன் இப்போது நமக்கு வாய்த் திருக்கிறது? முன்னாள் குடியரசுத் தலை வரும் சிறந்த அறிவியல் அறிஞருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத் தில் ஜோதிட மடமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். டாக்டர் கோவூர், டாக்டர். பராஞ்சிபே, மா. சிங்காரவேலர் உள்பட ஏராளமான அறிஞர்கள் இதைச் சாடியுள்ளனர். ஜாதக பலனால் திருமணமே ஆகாமல் தவித்த தன் நண்பரின் மகளுக்காக புதிதாக ஒரு ஜாதகத்தை - அந்த பெண்ணுக்கு பொருத்தமான ஒரு ஜாதகத்தை எழுத வைத்து, இப்போது அந்தப் பெண் நன்றாக வாழ்ந்து கொணடிருக்கிறாள். இது எங்கும் நடக்கிறது. புகழ் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்தசிங் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் போது, இராசி பலன் எழுதக்கூடிய நபர் வரவில்லையே என்பதால் இவர், அந்த பக்கத்தை நிரப்ப வேண்டுமே என்ப தற்காக ஏற்கனவே எழுதி அதே பத்தி ரிக்கையில் வெளியான ஏதோவொரு இராசி பலனை எடுத்துப் போட்டிருக் கிறார். அது பெரிய வரவேற்பை பெற்றி ருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் மக்கள்தானே வேறு எப்படி இருக்கும்?
இந்த மோசடிக்கு நாமும் துணைபோவதா என்று, குஷ்வந்த் சிங் இராசி பலன் பகுதியையே  அந்தப் பத்திரிகையில் இருந்தே அகற்றியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ஒரு நாயின் பிறந்த நாளைக் கொண்டு போய் ஜோதிடக்காரரிடம் காட்டி பலன் கேட்ட போது, அதற்கு அந்த ஜோதிடர் மனிதர்களுக்கு பார்ப்பது போல பார்த்து பலன் சொன்னதை ஏறக்குறைய எல்லோருமே படித்தும் கேட்டும் இருப்போம். அதுமட்டுமல்ல, ஈரோட்டில் ஒரு பெண் தனக்கு ஜோதிடம் பார்த்த பார்ப்பனர் ஒருவர் ஏமாற்றுப் பேர்வழி என்றதும், துடைப்பக் கட்டையைக் கொண்டு அடித்து விரட்டியதை எல்லா நாளேடு களும்தான் வெளியிட்டன. இதற்குப் பிறகும் இந்த மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன. அந்த மோசடிகளைத்தான் பகுத்தறிவு நாளேடாம் விடுதலை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்! என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஏற்றத் தாழ்வற்ற சமத்துவம் ஏற்படுகின்ற வரையிலும் இந்த மோசடிகளை இப்போதைக்கு வீழ்த்த முடியாது என்றாலும், பணம் கொடுத்துப் பார்த்த ஜோதிடம் பலிக்க வில்லை என்றால் சம்பந்தபட்ட ஜோதி டரைத் தட்டிக் கேட்கும் மனோபாவ மாவது மக்கள் மனதில் வரவேண்டும். அப்படி வந்தாலே இந்த ஜோதிடம் ஒழிந்துவிடும்.
விடுதலை ஞாயிறு மலர்,6.12.14

ஞாயிறு, 5 ஜூலை, 2015

சோதிடம் - தந்தை பெரியார்



இந்தியாவில் இந்துக்கள் என்ப வர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல் லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண் டெனல், இவை முத லாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத் தையும் உபயோகிக்கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம்.
சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங் களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத் திற்காகவும், ஆசைக்காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தியர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங் களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகிய வைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.
அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முத லானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேர மாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக் குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண் டும். கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டு பிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென் பதாகவே காணலாம். சாதாரணமாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சம யத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட்சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,
இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத் திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.
தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.
உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத் திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண் டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாதகத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையாயிருந்தாலும் இருவருக் கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்க னவே இருக்கின்றபடி நடந்துதானே தீரும்.
இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திரமில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தியாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.
நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?
ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந்தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.
இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடி யோடு விட்டுத்தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930
-விடுதலை,21.6.15

வியாழன், 14 மே, 2015

சோதிடப் புயல்!


Astronomy என்பது வான இயல். இது காரண காரியத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமானது. Astrology என்பது சோதிடம் கூறுதலாகும். இதற்கும் அறிவியலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது.
ஆனால் மெத்த படித்த சிலரும் இவ்விரண் டையும் ஒன்று என்று எண்ணி குழம்புகின்றனர். Astrology சோதி டம் என்பது வெறும் புரட்டே என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மெயில் நாளிதழில் (‘The mail’ Madras)  7_11_1981 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
நவம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பெரும் புயல் ஒன்று தமிழ்நாட்டு கடலோரத்தையும் வங்காள தேசத்தையும் கடுமையாக தாக்கு மென்றும்; அது 1977ஆம் ஆண்டு நவம்பரில் வீசிய புயலைப் போல் பயங்கரமாக இருக்கும் என்றும்;
அப்புயலின் உச்ச கட்டம் 13ஆம் தேதியாக  இருக்கும் என்றும் Indian Institute of Astrology யைச் சேர்ந்த டாக்டர். ஹிராலால் பால் என்பவர் சோதிடம் கூறியிருந்ததுடன் அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
ஆனால், அந்தோ பரிதாபம்! அவர் குறிப்பிட்ட நவம்பர் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி முடிய - அது அய்ப்பசி மாதமான போதி லும் (சென்னையில்) ஒரு துளிகூட மழை இல்லாமல் வெயில் அடித்து இரவில் பகல்போல நிலவும் காய்ந் தது.
தமிழ்நாட்டில் எங்கும் புயல் இல்லை. வங்காளதேசத்திலும் புயல் அடித்ததாகச் செய்தி இல்லை.
சோதிடம் பொய் என்பதற்கு சரியான ஆதாரமாகும் இது.
-விடுதலை ஞாயிறு மலர், 28.3.15

.

ஞாயிறு, 29 மார்ச், 2015

உலகக் கிரிக்கெட்(டு) கூத்து! இந்தியா வெல்லும் என்ற ஆரூடங்களும், யாகங்களும் பலிக்கவில்லை



  • ·        
    முட்டி தேய திருப்பதி மலை ஏறியும் பயனில்லை
    ·         நாக்கை வெட்டிக் காணிக்கை எல்லாம் வீண்!

சென்னை, மார்ச் 27- உலகக் கிரிக்கெட்டில் இந் தியா வெல்ல செய்யப்பட்ட யாகங்களும், வேண்டுதல் களும், ஆருடங்களும் பலிக்கவில்லை; மூடத் தனத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டு விட்டது.
வாஸ்துமீன் சொன்னது என்னாச்சு?
சென்னை ரசிகர்கள் பிள்ளையாரப்பா எப்படியாவது மேட்ச்ல ஜெயிக்க வையப்பா... என்று கிரிக்கெட் பிள் ளையாரே கதி என்று கிடந்தனராம். அரையி றுதி வரை வந்து விட் டோம். இந்த மஞ்சள் சட்டைக்காரர்களை துவைச்சு தொங்கப் போட ணும் என்று லட்சார்ச் சனை ஒருபக்கம் நடத் தினாலும் ஜோசியம் வேறு பார்த்து வெற்றியை உறுதிப்படுத்தினராம் சென்னை ரசிகர்கள்.
கிளி ஜோசியம்... எலி ஜோசியம் அல்ல சாணக்யா  என்ற மீன் (வாஸ்துமீன்) இந்தியா நிச்சயம் வெல் லும் என்று ஜோதிடம் சொன்னது. ஆனால் அத் தனையும் பொய்யாப் போச்சே என்கின்றனர் ரசிகர்கள்.
ஜோசியம் பார்க்கலயோ!
இந்நிலையில் சென்னை, அண்ணா நகரில் அமைந் துள்ள மிசிகீளி என்னும் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தினர் வளர்த்து வரும் 'சாணக்யா' என்னும் மீன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி எது எனக் கணித்தது. கச்சிதமாக கவ்வி மீன் தொட்டிக்குள் இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலியா ஆகிய நாடு களின் கொடி பொறித்த அட்டைகளைப் போட, சாணக்யா மெல்ல கொடி அட்டைகளை நோக்கி வந்தது. அனைவரும் ஆர் வத்துடன் சாணக்யாவைப் பார்த்தபடி இருக்க, சாணக்யா இந்தியக் கொடி பொறித்த அட் டையைக் கவ்வியது. சொன்னது பலிக்கலையே!
முன்னதாக, இலங்கை- தென் ஆப்பிரிக்கா, இந் தியா - பங்களாதேஷ், பாகிஸ்தான் - ஆஸ்திரே லியா, நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா -_ நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்ததாம் இந்த சாணக்யா. ஆனால் இம் முறை இந்தியா_ஆஸ்தி ரேலியா இடையேயான போட்டியைப் பற்றி சாணக்யா கணித்த முடிவு பொய்யாகிவிட்டதே என்று கவலையில் ஆழ்ந் துள்ளனராம் ரசிகர்கள்...
மீன் தொட்டியில் உணவு போடப்பட்டா லும், வேறு எதைப் போட்டாலும் அதை உணவு என்று எண்ணி அதை உண்ண எத்தனிக் கும் மீன். இதில் எப்படி ஜோதிடம் புகுந்தது?
ஆப்கானிஸ்தானத்திலும்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச் சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங் கில் யாரும் ஆப்கானிஸ் தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியதாம்.

நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனை வர் பட்ட ஆய்வு மாண வர் எடியூர்டோ சன் டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப் பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூ டம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக் கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட் டுக்கும் சூட்டியிருக்கிறார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடு களின் கொடிகளைப் பார் வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ் தான் கொடியை தேர்வு செய்ததாம்.
கிரிக்கெட் போட்டி யில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ் தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராதுஆனால், முடிவு என்ன ஆனது? ஆஸ்திரே லியாதானே வென்றுள் ளது.
நாக்கை அறுத்துக் காணிக்கையாம்!
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளி யான இவர், தீவிர கிரிக் கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், கமலேசன் (2) என்ற மகனும் உள்ளனர்.
இவரது மாமியார் வீடு ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமோட் டூரில் உள்ளது. நேற்று ஆஸ்திரேலியா _ இந்தியா அணிகளுக்கு இடையே யான அரையிறுதி போட் டியை சுதாகர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஜோலார் பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள வேடியப்பன் கோவிலுக்கு சென்று இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண் டுதல் செய்துவிட்டு, வருவ தாக கூறி வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் கோவிலுக்கு சென்ற சுதாகர் அங்கு பூஜை செய்து விட்டு, கற்பூரம் ஏற்றினார். பின் னர் பிளேடால் தன்னு டைய நாக்கை அறுத்து துண்டாக்கினார். வலி தாங்க முடியாத நிலையி லும், அறுத்து துண்டித்த தனது நாக்கை கோவில் முன்பு வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கடவுளிடம் வேண்டினார்.
அதைக்கண்டு அக் கம்பக்கத்தினர் பதறிய டித்து ஓடி வந்து, சுதா கரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
முட்டி தேய்ந்ததுதான் மிச்சம்!
உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் கனவாக உள்ளதாம். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனராம்.
ஆந்திராவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு ஏறிச் சென்று ஏழுமலையானை வேண்டி னாராம் அவரது பெயர் சாணக்கியா. திருப்பதி முத்தியால் ரெட்டி பள்ளியை சேர்ந்தவர்.
9ஆம் வகுப்பு படித்து வரும் இவர் ஆந்திரா கிரிக்கெட் அசோசியே ஷனில் பயிற்சி பெற்ற இளம் கிரிக் கெட் வீரர். தேசிய அளவிலான கிரிக் கெட் போட்டியில் ஆந்திர அணி சார்பில் விளையாடி வருகிறார்.
இவர் கிரிக்கெட்டில் இந்தியா கோப்பையை பெற ஏழுமலையானை நம்பியிருக்கிறார். தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு முழங்காலிட்டு சென்றாராம். நேற்று மாலை 5.45 மணிக்கு அலிபிரியில் இருந்து புறப்பட்ட அவர் இரவு 11 மணி அளவில் திருமலையை அடைந்து  ஏழுமலையானை வேண்டி னாராம். (அதற்குள் கிரிக்கெட் போட் டியே முடிந்து விட்டது).
பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்த சிவாச்சாரியார்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட் டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, மதுரையைச் சேர்ந்த சிவாச்சாரி யார்கள் சிலர், ஆடி வீதியில் உள்ள பிள்ளையாருக்கு 108 தேங்காய்களை சிதறு தேங்காயாக உடைத்தார்களாம்.

.