பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பிறந்தகாலம் என்பதை ஆதாரமாக வைத்து பலன் சொல்ல முடியுமா?


6-7-1930, குடிஅரசிலிருந்து...



பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதா னாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டி ருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனு டைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டு பிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம்.

குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக் கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும்.

பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும்.

கடிகாரமில்லாவிட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும்.

மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளி விட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண் டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக் கிறார்கள் என்ற கணக்குப்படி  பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங்களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந் தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது.

(இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.)

இதைத் தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்திரிகளின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும்.

இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாக கணக்கு ஏற்படுகிறது.

இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிடத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது.

ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

நிமிடக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந் தைகள் பிறப்பதாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம்.
- விடுதலை நாளேடு,8.12.17

வெள்ளி, 16 ஜூன், 2017

மக்களை ஏமாற்றும் சோதிடம்!




இந்தியாவில் இந்துக்கள் என்பவர்கள் சாமி ஆடுதல், வாக்குச் சொல்லுதல், பூதம், பேய், பிசாசு, மனிதனை அடித்தல், மனிதனைப் பிடித்தல், மந்திரம் மந்திரித்தல், பில்லி சூனியம் செய்து மக்களுக்குத் துன்பம், சாவு முதலியவை உண்டாக்குதல், குட்டிச்சாத்தான் கருப்பு முதலியவை களைக் கொண்டு சித்து விளையாடுதல், வசியம் செய்து மக்களை வாதீனப்படுத்தல், முன் ஜென்மம் பின் ஜென்மம் உண்டெனல், இவை முதலாகிய விஷயங்களில் நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்க்கை நலத்திற்கு என்றும் எதிரிகளின் கேட்டிற்கு என்றும், எப்படித் தங்கள் பணத்தையும் நேரத்தையும் உபயோகிக் கின்றார்களோ அதுபோலவே தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை  வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ் வளவோ கெடுதிகளும், பொருள் நஷ்டம், காலம் நஷ்டம், தப்பு அபிப்பிராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதை கண்கூடாய்ப் பார்க்கிறோம். சாதாரண மாய் எப்போதுமே ஜோசியன், மந்திரவாதி, கோயில் குருக்கள் ஆகிய மூவரும் மக் களின் பேராசைக்கும் முட்டாள்தனத் திற்கும்  சரிபங்கு தாயாதிகளே யாவார்கள். எப்படி எனில் முதலில் ஜோசியன் ஒருவ னுடைய ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லுவதன் மூலம் கண்டம் நீங்க சாந்தியும் கிரகதோஷ பரிகாரத்திற்குச் சாமிகளுக்கு அர்ச்சனை அபிஷேகங்களும் செய்யும்படி சொல்லுவான். இதைக் கேட்ட  அந்த மனிதன் தனது முட்டாள் தனத்தினால்  ஏற்பட்ட பயத்திற்காகவும், ஆசைக் காகவும், மந்திரவாதியைக் கூப்பிட்டு சாந்தி கழிக்கச் சொல்லுவான். இந்த மந்திரவாதிகள் அனேகமாய் வைத்தி யர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாந்தி கழிக்கக்  கடைச்சாமான் பட்டியல் போடும் போதே ஒரு மண்டலம் (48 நாள்) அரை மண்டலம் நவகிரகங்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சனி செவ்வாய் முதலிய ஏதாவது  ஒரு கிரகத்திற்கோ, ஒரு சாமிக்கோ, அர்ச்சனை எள்ளு, பருத்திக் கொட்டை முதலிய தானம் விளக்கு வைத்தல் அபிஷேகம் செய்தல் ஆகியவைகளையும், ஏதாவது புண்ணியப் புராணம்  படித்தல் முதலி யவைகளையும் சொல்லிவிடுவான். இவை களை  எல்லாம் செய்வதால் மந்திர வாதிக்கும் அர்ச்சகனுக்கும் புராண பிரசங்கிக்கும் வரும் வரும்படியில் ஒரு பாகம் ஜோசியனுக் குச் சேர்ந்து விடும். இந்தப் படியே எங்கும் இப்போதும் நடப்பது வழக்கம். ஆகவே இந்த விஷ யத்தில் மந்திரம் அர்ச்சனை ஆகியவை களைப் பற்றி விசாரிக்குமுன் ஜோசியம் என்பதைப் பற்றியே முதலில் யோசிப் போம்.

அதாவது:- ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷ யங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ஜோசியம் என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லு வதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து தடுத்துக் கொள்வதும். இஷ்ட சித்திக்கு ஏதாவது  விரோதமாய் இருந்தால் அதற்கும் ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோ தத்தை நீக்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு மற்றும் வேறு பல வழிகளிலும் அதாவது பேர் நாமத்தைக் கொண்டும் கேட்கப்பட்ட நேரம், கேட் பவரின் இருப்பு நிலை, கேட்ட சங்கதி, ஜோசி யனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய், தகப்பன், சகோதரன், பந்து முதலானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியவை களைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து ஆகியவை களைக் கேட்டல் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலாகியவைகளின் மூலமும் பலன் சொல்லுவதுமுண்டு. ஆகவே  மேல்கண்ட எல்லா வற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து பலன் சொல்லக் கூடுமா? என்பதைப் பற்றி முதலில் ஆராய்வோம்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில் பட்டுக் கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால் தலையெல்லாம் மருத்துவச்சிக் கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒரு புறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அந்த நேரத்தைச் சரியாக எப்படி கண்டுபிடிக்க முடியும்? என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா இல்லையா? ஆணா பெண்ணா என்பன போன்றவை களைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்த சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்த சேதியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும். அந்தக் கடிகாரம் சரியான மணியா? என்பது தெரிய வேண்டும். கடிகாரமில்லா விட்டால் வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந் தால் அதற்குப் பிடிக்கும் நேரம் முதலியவை அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும் பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒரு புறமிருக்க அந்த நேரத்தால் பலன் சொல்லுவதனால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன்கள் எவ்வளவு இருக்கக்கூடும் மற்ற ஜீவன்களை எல்லாம் தள்ளிவிட்டு வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் உலகத்தில் 170 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக் குப்படி பார்ப்போமானால் சென்னை முதலிய பட்டணங் களில் சாதாரண அனுபவங்களின் படிக்கு உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று  அறுபத்தாறு) குழந்தைகள் பிறப்பதாக கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக் கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை  உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன் றுக்கு 70  (எழுபது) குழந்தைகள் பிறப் பதாகக் கணக்குப் போடப்பட்டிருக்கின்றது.) இதைத் தவிர கணக்குக்கு வராத விதவை களின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண் களின் குழந்தைகள், புருஷன் சமீபத்தில்  இல்லாத ஸ்ரீகளின் குழந்தைகள் ஆகிய வைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்குக்கு  அதிகமாகும். இது ஒரு புறமிருக்க மேல்படி சாதாரண கணக்குப் படிக்கு பார்த்தாலே ஒரு நாளைக்கு பிறக் கும் குழந்தைகளைப் பங்கிட்டு பார்த்தால் ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக் கிறதாக கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி ஜனத்தொகை கொண்ட நமது இந்தியாவுக்கு மாத்திரம் கணக்குப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம்  பிறக் கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே இந்த 33 குழந்தை களுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக் குச் சரியான நேரம் கண்டுபிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்ப தாயிருக்கும் போது ஒரு சோதிடம் சொல்லுவதற்குப் போது மான காலமாகிய ஒரு லக்கினம் நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும்? என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்த மற்றதென்பதாகவே காணலாம். சாதாரண மாய் ஒரு ஜாதகம்  என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சமயத்தின் லக்கினம் நட்சத்திரம் ஆகியவை களைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் 2ந் தேதி புதன்கிழமை  காலை சுமார் 10  மணிக்கு விருச்சிக லக்கினத் தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்து விட்டால் இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லி விடக் கூடும் என்பதே அநேகமான ஜோசியத்தின் லட் சணம். ஆகவே இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழி கைக்குள் அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபதாயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒரு புறமிருக்க மேலும் இந்த லக் கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய பூதக்கண்ணாடி பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடிக்கு மேல் பிறந்து இருக்க வேண்டும், இதுவுமொரு புறமிருக்க,

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப் படிக்கு 4158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்தெட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆகவே அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக  மேற்படி 4158 பேருக்கும் வாழ்க் கையில் ஒரே விதமான பலன் அனுபவ மிருக்க முடியுமா? அந்தப்படி  இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

தவிர இந்தப் பலன் அனுபவங்கள் மனிதனுக்குத் தானாக ஏற்படுவதா? அல்லது ரட்சிக்கிற கடவுள்களின் தன்மை யால் ஏற்படுவதா? அல்லது, முன் ஜென் மத்தில் செய்த கர்மத்தின் பலனாய் பலன் ஏற் படுவதா? அல்லது விதியின் பயனாய் பலன்கள் ஏற்படுவதா? என்பவைகளையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந் நான்கிலும் மனிதனுக்குப் பலன் அவனது சொந்த இஷ்டத்தால் செய்கையால் தற் சம்பவமாய் ஏற்படுமானால் மேல்காட்டி யவைகளில் அதுதவிர மற்றவைகள் மூன்றும் அடிபட்டு போகும். கிரகங்களின் தன்மையினால் ஏற்படும் என்றால் இதைத் தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். முன் ஜென்ம கருமத் தின்படி  என்றால் இது தவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். தலைவிதிப்படி என்றால் இதுதவிர மற்ற மூன்றும் அடிபட்டு போகும். ஆகவே மனிதனுடைய அனுபவ பலனுக்கு இவற் றுள் ஏதாவது ஒன்றுதான் காரணமாய் இருக்க முடியுமே தவிர  இன் நான்கும் சேர்ந்து குழப்பிக் கொண்டிருக்க முடியாது. இது ஒரு புறமிருக்க இந்த வியாசத்திற்கு  அவசியமான பிறந்த நேர லக்கினத்தால்  ஏற்பட்ட கிரகத் தன்மை  பலனைப் பற்றியே மேலும் ஆராய்வோம்.

உதாரணமாக இன்ன இன்ன கிரகம் இன்ன இன்ன வீட்டில் இருப்பதாலும் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கிரகங்கள் இன்ன இன்ன கிரகங்களைப் பார்ப்பதாலும் இந்த ஜாதகன் இன்ன இன்ன  காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரி யான பிறந்த காலத்தைக் கண்டு பிடிக்கப் பட்ட ஜாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்கார ஜோசியன் ஒருவன் பலன் சொல்லுகின்றான் என்பதாக வைத்துக் கொள்வோம். இவற்றுள் இந்த ஜாதகன் இன்ன வேளையில் இன்னாரைக் கொன்று  ஜெயிலுக்குப் போவான் என்று இருந்தால் அந்தக் கொல்லப்பட்டவனுடைய ஜாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப்பட்டுச் சாவான் என்று இருந்தா லொழிய ஒருக் காலமும் பலன் சரியாய் இருக்கவே முடியாது என்பது  உறுதியான தாகும். இந்த இரண்டு ஜாதகர்களுடைய பலனும் இருவருக்கும் தெரிந்து விட்ட தாகவே வைத்துக் கொண்டாலும் இவர்கள் எந்தக் கார ணத்தைக் கொண்டாவது தப்பித்துக் கொள்ள முடியுமா? என்றால் ஒரு காலமும் முடியவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தப்பித்துக் கொண்டால் ஜோதிடம் பொய்யாய் விடும், அன்றி யும் ஒரு சமயம் தப்பித்துக் கொள்வதாகவே வைத்துக் கொண்டால் அந்த இருவர்கள் ஜாதகத் திலும் இந்தச் சங்கதி தெரிந்து இருவரும் ஜாக்கிரதையாயிருப்பதின் மூலம் இரு வருக்கும் அந்த காலத்தில் அந்த சம்பவங் களால் கொலையோ சிறை வாசமோ கண்டிப்பாய் ஏற்படாது என்று தான் அந்த ஜாத கத்தின் முடிவு இருந்தாக வேண்டும். அப்படியிருக்குமானால் இந்த விஷயத்தை அவ்விருவரும் தெரிந்து ஜாக்கிரதை யாயிருந்தாலும் தெரியாமல் கவலையற்றே அஜாக்கிரதையா யிருந்தாலும் இருவருக்கும் கொலையும் சிறை வாசமும் கிடைக்க முடியவே முடியாது என்பதிலும் சந்தேக மில்லை. ஏனெனில் ஜாதகத்தில்  ஏற்கனவே இருக்கின்றபடி நடந்து தானே தீரும்.

இதற்குச் சாந்தி தோஷ பரிகாரம் என்பவைகள் செய்வதன் மூலமாவது ஏதாவது பலனை  மாற்றி விட முடியுமா? என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். அதாவது இன்ன கிரகம் இன்ன வீட்டில் இருப்பதால் இன்ன கெடுதியான பலன் ஏற்படும். ஆதலால் இன்ன தோஷ பரிகார சாந்தியும் இன்ன கிரக தேவதைக்கு  இத்தனை நாள் அர்ச்சனையும் செய்தால் நிவர்த்தியாகும் என்று ஜோசியன் சொல் வானானால் அல்லது ஜாதகத்தில் இருக்கு மானால் இந்த சாந்தியின் மூலமாகவோ அர்ச்சனையின் மூலமாகவோ அந்த கிர கங்களை அந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு மாற்ற முடியுமா? அல்லது அவைகள் மாறுமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அது மாத்திர மில்லாமல் இம் மாதிரி சாந்தியோ பரிகாரமோ செய்வதன் மூலம் தப்பித்துக் கொள்வான் என்றும் அதில் இருந்தாக வேண்டாமா? அப்படிக்கில்லாத பட்சம் எந்தவித சாந்தி யாலும் தோஷம் பரிகாரமாக முடியாது. முடிந்தால் ஜோசியம் பொய் என்றே தீர்மானமாகி விடும்.

நிற்க, முடிவாக எந்த காரணத்தைக் கொண்டாவது ஜோசியம் நிஜம் என்றாகி விட்டால் எந்த மனிதன் மீதும் எந்தக் குற்றமும் சொல்வதற்கு இடமுண்டா?

ஜாதகப்பலன்படி நடவடிக்கைகள் நடந்தால் அதற்கு ஜாதகன் மீது குற்றம் சொல்லுவது மடமையும் யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையும் ஆகாதா? என்று கேட்கின்றோம். ஒரு மனிதனுக்கு இன்ன காலத்தில் திருடரால் பொருள் நஷ்டம் ஏற்படும் என்று இருந்தால் அதே நேரத்தில் மற்றொரு மனிதனுக்குத் திருட்டுத் தொழில்  பொருள் லாபம் கிடைக்கும் என்று ஜாதகப் பலன் இருந்துதான் ஆக வேண்டும். அது மாத்திரமல்லாமல் திருட்டு கொடுத்த வனுக்குப் பணம் கொடுத்து யார் யார் நஷ்ட மடைந் தார்களோ அவர்கள் ஜாதகத்திலும் இன்ன காலத்தில் இன்னாருக்குப் பணம் கொடுத்து அது திருட்டுப் போய் அதனால் நஷ்டமடைய வேண்டும் என்று இருந்தேயாக வேண்டும். அதுபோலவே திருடினவனி டமிருந்து பணம் வாங்கியவர்களுக்கும் இன்ன காலத்தில்  இன்னான் இன்னாரிடம் திருடுவதால் இன்ன இன்னா ருக்கு லாபம் வரும் என்று அவர்கள் ஜாதகப் பலனும் இருந்தாக வேண்டும். ஆகவே இந்தப்படி எல்லாம் ஜோசிய உண்மை இருந்துவிட்டால் பிறகு கடவுள் செயல் எங்கே? மோட்ச  நரகம் எங்கே? தலைவிதி எங்கே? முன் ஜென்ம வினைப் பயன் எங்கே? இவைகளுக்கு வேலை ஏது? என்பதைப்பற்றி யோசித்தால் இவை அவ்வளவும் பொய்யாகவே முடியும்.

இவைகளுக்கெல்லாம் நேரமும் இடமும் சம்பாதித்து மெய்ப்படுத்தக் குழப்பு வதாக வைத்துக் கொண்டாலும் கண்டிப்பாக  ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு  அந்த மனிதனுடைய பொறுப்பையாவது அடியோடு விட்டுத் தானாக வேண்டும். இனியும் இதைப்பற்றிய விபரங்கள் மற்றொரு சமயம் விரிப்போம்.

- குடிஅரசு - தலையங்கம் - 06.07.1930

-விடுதலை,11.6.17

செவ்வாய், 16 மே, 2017

ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் அண்டப் புளுகு! சடங்குமூலம் சிறந்த குழந்தைகளை உருவாக்குகிறார்களாம்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை



கொல்கத்தா, மே 15 ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ எனும் அமைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நல்ல குழந்தைகளைப் பெற்றிடலாம் என்றும், அதற்கான பயிற்சி அளிக்கப்போகிறோம் என்றும் கூறி மக்களிடையே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.

நல்ல குழந்தைகள் பிறக்க  பெற்றோர்களாக உள்ள எவரும் எதையும் செய்ய முன்வருவார்கள் என்கிற தன்மையை இந்துத்துவா வியாபாரத்தின் மூலதனமாக்கும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் கருவி களைக் கொண்டும், முறையான மருத்துவர்களைக் கொண்டும் சிகிச்சை அளித்து, நோயின்றி வாழும் தடுப்பு முறைகளைக் கூறப்போகிறதோ என்று எவரும் தவறாக எண்ண வேண்டியதில்லை.

எப்போதும்போல், அதன் பிற்போக்குத்த னங்கள், அண்டப்புளுகு மூட்டைகளைக் கொண்டு, பழைமையான இந்து மத சடங்குகளின் பெயரால் சிறந்த குழந்தைகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்போகிறோம் என்று மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது. நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததுடன், கட்டிய பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் சார்பில் இந்நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தில், முற்றிலும் பழைமையான இந்து சடங்குகளின்மூலமாக பார்ப்பதற்கு அழகான நல்ல குழந்தை, ஆண் குழந்தை, சாதிக்கும் குழந்தைகளைப் பெறலாம், குழந்தைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதி இடம்பெற்றுள்ள தெற்கு கொல்கத்தாவில் பவானிபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ எனும் பெயரிலான வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அவ்வமைப்பு கருவில் உள்ள குழந்தைகள் குறித்ததகவல்களை,கருவிலுள்ளசிசுவின் தன்மைகள் குறித்து (இந்துமத சடங்குகளின் மூலமாக) வெளிப்படுத்துவதற்கு தம்பதிக்கு ரூ.500வீதம் கட்டணமும் வசூலித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதியின் ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்ட விழாவை எதிர்த்து  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஆரோக்ய பாரதி, ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற திட் டத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி கருவில் சிசுவின் தன்மைகள்குறித்து கண்டறிந்து ‘சூப்பர் குழந்தைகளை’ உருவாக்குவ தற்காக, குழந்தைக்கான கருவை சுமக்கின்ற பெற்றோரிடமிருந்துகட்டணமாகரூ.500பெற்றுக் கொண்டு, கருவில் உள்ள சிசுகுறித்த ரகசிய தகவல்களை (இந்து மத சடங்குகள் மூலமாக)  ஆரோக்ய பாரதி எனும் அவ்வமைப்பு வெளி யிடும் என்று கூறுகிறது.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் சொற்பொழிவாற்ற ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் வருகைப்பேராசிரியர்டாக்டர்கரிஷ்மாநார்வின் என்பவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளார்.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் கருவில் குழந்தைகளை உரு வாக்குவதன் மூலமாக  அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்க முடியும் என்று குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் ஹிதேஷ் ஜானி என்பவர் கூறுகிறார்.

ஆரோக்ய பாரதி அமைப்பின்சார்பில், கருவில் கண்காணிக்கும் சிசுக்களை (பழைமையான இந்து மத சடங்குகளின் வாயிலாக) ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற  திட்டத்தை அறிந்த கொல்கத்தா மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம்

இத்திட்டத்தை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமானது என்று குறிப்பிட்டு, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் கடந்த 5.5.2017 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டைநோக்கி கல்வீச்சு

இந்து மதத்தில் உள்ள கற்பனைக் கதைகளைக் கொண்டு  வலிமையான நல்ல குழந்தையைப் பெறுவது  எப்படி என்பதை கற்பிப்பதுதான் ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’வின் நோக்கமாக உள்ளதாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்-.எஸ்-. கிளை அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் செயல்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய தையடுத்து, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசின் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்ததால்,  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டைநோக்கி கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில்ஈகல் பாபன் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதி அமைப்பின் ஊனத்தை ஒழிப்பது என்கிற திட்டத்தின்படி, தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப்படக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஆரோக்ய பாரதியின் செயல் திட்ட விளக்கக் கூட்டத்தை நடத்த அனுமதித்து, அதைப்பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் வழக்குரைஞர் பிரனாப் கோஷ் நீதிமன்ற உத்தரவை பின்பற்று வதாக கூறியுள்ளார். ஆரோக்ய பாரதியின் திட் டத்தில் 150 இணையர் சிகிச்சைக்கு பதிவு செய் துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்டு தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை என ‘கர்ப் சன்ஸ்கார்’ நிகழ்வை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனன்யா சக்ரபோர்த்தி கூறும்போது,

“இது (நீதிமன்றத்தின் கண்டனம்) குழந்தை களின் உரிமைகள் மற்றும் அறிவியலுக்கான வெற்றியாகும். அவர்கள் நடத்துகின்ற நிகழ்வானது குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தம்பதியரை முற்றிலும் அறிவியலுக்கு மாறாகவும், பிற்போக் குத்தனமாகவும் வழிநடத்துவதாக உள்ளது..

இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்குத்தனமானபாகுபாடானதுகுழந் தைகள் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல் லாமல், பிஎன்டிடி சட்டத்தின்படி சட்ட விரோத மானதுமாகும்’’ என்றார்.

இவ்வழக்கில் ஆரோக்யா பாரதி  அமைப்பின் வழக்குரைஞர் பிரோசி எடுல்ஜி  கூறும்போது,

‘‘குழந்தை பிறப்பில் பல்வேறு கலாச்சாரங் களுடன் பலவிதமான சடங்குகள் உள்ளன. அவற்றை பாதுகாத்திட வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஏராளமான கலாச்சார சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன’’ என்றார்.

கட்டணத் தொகையை திருப்பியளிக்க உத்தரவு

இரண்டு நாள்கள் பயிற்சிக்காக 150 தம்பதி யரிடமிருந்தும் கட்டணமாகப் பெறப்பட்ட தலா ரூ.500 தொகையை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநில ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஜிஷ்ணு போஸ் கூறும்போது,

‘‘நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் மதிப்பளித்து, பேராசிரியர் நர்வானியின் சொற்பொழிவைப் பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்திடம் அளிப்போம்’’ என்றார்.

சமூக கட்டமைப்பை

சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

திரிணமுல் காங்.அமைச்சர்

பார்த்தா சட்டர்ஜி சாடல்

ஆர்.எஸ்.எஸ்-.சின் இதுபோன்ற செயல்பாடு களைக் கண்டித்துள்ள அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு கட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்துக்கான நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, “நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வர வேற்கிறோம். மாநிலத்தில் சமூக கட்டமைப்பை சீர்குலைத்திட ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. அதனால்தான், கிடைக்கின்ற அனைத்து வாய்ப் புகளிலும் மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி, அறிவியலுக்கு புறம்பானவற்றை ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதோ ஆர்.எஸ்.எஸ்.சின்அரசியல்கட்சியாகஉள்ள பாஜக. நாடுமுழுவதற்கும் முறையாக செயல் படுத்தவேண்டிய திட்டங்களை செயல்படுத்த முனையாமல், பாஜக ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் ஒன்றாக உள்ள மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தலுக்காக அம்மாநில மக்களின் வாக்குகளை முன்னிறுத்தி, ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்டத்தை விளம்பர நோக்கத்துடன் மட்டுமல்லாமல், இந்துத்துவத்தை திணித்து மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ்- கிளை அமைப்பாக, மருத்துவ அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதியை’ செயல்படுத்த முனைப்பு காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு

‘‘ஆரோக்யபாரதிஅமைப்பின்சார்பில் வார இறுதி நாள்களில் இரண்டுகூட்டங் கள்நடத்தப்பட்டுள்ளன.இதுவரை எந்த தம்பதி யரிடமும் சிகிச்சை மேற்கொள்ளப் படவில்லை. மேலும் பெற்றப் பணத்தைத் திருப்பி அளிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது மூடத்தனத்துக்கு எதிராக அறிவியலுக்குக் கிடைத்துள்ள வெற்றி’’ என்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி கூறுகிறார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியுள்ளது. வெட்ககரமான, மானக்கேடான, ஆணாதிக்க, பெண்ணின வெறுப்பு கொண்ட, அறிவியலுக்குப்புறம்பான செயலாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் கர்ப் சன்ஸ்கார் விழாவுக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால்  வெற்றி கிடைத்துள்ளது என்று நீதிமன்றத்தீர்ப்பை வரவேற்கும் பதிவுகள் பரவியவண்ணம் உள்ளன.
-விடுதலை,15.5.17