பக்கங்கள்

திங்கள், 6 ஜூன், 2016

ஜோதிடப் புரட்டை நம்பாதீர்!


வாஸ்து நிபுணரால் லட்சக்கணக்கில் ஏமாந்தவர் நீதிமன்றம் சென்றார்
ரெய்ச்சூர்(கர்னாடகா) மார்ச் 17_ வாஸ்து நிபு ணரின் ஆலோசனையின் பேரில் புதிதாக கட்டிய வீட்டை இடித்து பல்வேறு மாற்றம் செய்தவர், எந்த ஒரு பலனும் கிட்டாததால் வாஸ்து நிபுணர்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றமும் இவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. கருநாடகா ஆந்திரா மற் றும் தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் அடிக்கடி சர்லா வஸ்து என்ற வாஸ்து நிபுணரின் விளம் பரம் தொடர்ந்து வரும், இந்த நிகழ்ச்சியை சந்திர சேகர் குருஜி என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் வழக்குரைஞரான மகா தேவ் துனியால் என்பவர் 2013-ஆம் ஆண்டு இவரைத் தொடர்பு கொண்டு தான் நிம்மதி இழந்து தவிப்ப தாகவும் தனது வருவாய் முழுவதும் செலவழிந்து விடுவதாகவும், இதனால் கடனாளி ஆகிவிட்டேன் என்றும் கூறி சுகமான வாழ்விற்கு வழிகாட்டுமாறு கூறினார். இவர் சமீபத்தில் தான் புதிதாக வீடு கட்டி இருந்தார். வீட்டை பார் வையிடவந்த சந்திரசேகர் இவரிடம் ஆரம்பத்தில் 11 ஆயிரத்திற்கு மேல் முன் பணமாக பெற்று, வீட்டில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றவர். சில நாள் களுக்குப் பிறகு கணினியில் செய்யப்பட்ட சில வரை படங்களைக் கொடுத்து இதே போல் உனது வீட் டில் மாற்றம் செய்தால் நீ செல்வந்த ராவாய் என்று கூறி மேலும் சில ஆயி ரங்களை ஆலோசனைத் தொகையாக வாங்கிக் கொண்டார். இதனை அடுத்து மகாதேவ் புதிதாக கட்டிய வீட்டில் மீண்டும் சில லட்சங்கள் செலவு செய்து வாஸ்து நிபுணர் கூறியது போன்ற மாற்றங் களைச் செய்தார்.
நம்பி ஏமாந்த பரிதாபம்!
வாஸ்துவின் படி மாற் றம் செய்து ஒராண்டைக்  கடந்துவிட்ட நிலையில் மேலும் அதிக கடனாளி யாகி விட்டார். மேலும் அவரது குடும்பத்தில் பல் வேறு பிரச்சினைகள் தோன் றியது. இதனால் அவர் விஜயபுரா மாவட்ட நீதி மன்றத்தில் வாஸ்து நிபுணர் மீது மோசடி மற்றும் பொய்கூறி ஏமாற்றி பணம் பெறும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்தார் வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது நுகர் வோர் தொடர்பான வழக்கு என்பது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றியது. நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நுகர்வோர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் பி.எஸ்.அனந்தபூர் கூறியதாவது:
தொலைக்காட்சி மற் றும் பத்திரிகைகளில் வியா பாரம் மற்றும் ஆலோ சனை தொடர்பாக விளம் பரம் தருபவர்கள் நுகர் வோர் சட்டப்பிரிவின் படியுள்ள விதிகளின் கீழ் அவர்கள் செயல்படவேண் டும், இவர்களின் நடவடிக் கைகளால் ஏமாற்றப்பட்ட வர்கள், நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாம். மகாதேவ் தொடர்ந்த வழக் கின்படி வாஸ்து நிபுணர் மீது நம்பிக்கைத் துரோகம் மற்றும் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பேட்டி
இது தொடர்பாக ஏமாற் றப்பட்ட மகாதேவ் கன் னடப் பத்திரிகை ஒன்றிற் குப் பேட்டியளித்த போது கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சொந்தமாக வீடு கட்டினேன்; வீடு கட் டியதில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது, இப்பிரச்சினை தொடர் பாக நான் வீட்டில் நிம்மதி இழந்து விட்டேன். அதே நேரத்தில் பணம் கொடுத் தவர்கள் மீண்டும் திரும்பத் தரக்கோரி தொந்தரவு செய் தனர். ஒரு முறை தொலைக் காட்சியில் சாரல் வாஸ்து என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த நிகழ்ச் சியை நடத்துபவர் சந்திர சேகர குருஜி என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது நிலை பற்றிக் கூறி, நான் புதிதாக கட்டிய வீட்டில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா? என்று ஆலோசனை கேட் டேன். அவரும் என்னு டைய வீட்டிற்கு வந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
பணத்தைக் கறந்தார்
பிறகு ஹுப்லியிலுள்ள அவரது ஆள் ஒரு வர் என்னிடம் வந்து ரூ 11,600 பணமாகப் பெற்றுக்கொண் டார். சில நாள்கள் கழித்து கணினியில் பிரிண்ட் செய் யப்பட்ட ஒருவரை படத்தை என்னிடம் கொடுத்து வீட்டை இதில் உள்ளது போல் மாற்றினால் வாழ்க்கை வளம்பெறும் என்று சந் திரசேகர் குருஜி கூறினார். இதற்கும் ஆலோசனைக் கட்டணம் என்று கூறி 7 ஆயிரத்தை வாங்கிக் கொண் டார். கையில் பணம் இல் லாத நிலையிலும் சில லட்சங்களை மேலும் சில ரிடம் கடன் வாங்கி வீட்டை அவர் வரைபடத்தில் காட் டியது போன்று பல்வேறு மாற்றங்களைச் செய்தேன்.
ஏமாறாதீர்! ஏமாறாதீர்!
இதன் பிறகு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட வில்லை. இவர் வரை படத்தில் காட்டியது போல் வீட்டை மாற்றியமைக்க ரூ.4.5- லட்சம் வரை செலவு செய்தேன். வீட்டுச் சுவரை இடித்து பழைய நிலையில் இருந்த கதவை வேறு திசை யில் மாற்றி வைத்தேன். மேலும் படுக்கை அறையில் இருந்த அட்டாச் பாத் ரூமை வேறு இடத்தில் மாற் றினேன். ஆனால், வாஸ்து நிபுணர் கூறியதுபோல் எதுவுமே நடக்கவில்லை.
மேலும் ஏற்கெனவே இருந்த கடன்சுமை அதிக மாகி புதிதாக கட்டிய வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். எனது இந்த நிலைக்கு சந்திர சேகர்தான்  முழுக்காரண மாகும். இந்த நிலையில் இவரது நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் இவரால் ஏமாற்றப்படுள்ள னர் என்று எனக்குத் தெரி யாது. இருப்பினும் இனி எவரும் இவரிடமும் இது போன்று வாஸ்து ஜோதி டம் என்று ஏமாற்றும் நபர் கள் பிடியில் யாரும் சிக்கக் கூடாது என்ற முடி வில் நான் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் சென்றுள்ளேன். நீதிமன்றமும் எனது வழக் கைகையில் எடுத்துள்ளது. என்று கூறினார்.
உதயவாஹினி (கன்னடா)\
தி இந்து (ஆங்கிலம்)
-விடுதலை,17.3.16