பக்கங்கள்

திங்கள், 5 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி நம்பிக்கையாளர்களுக்கு மரண அடி!

2011-ஆம் ஆண்டு வியாழனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஜூனோ என்ற வியாழன் ஆய்வுக் கலன் இன்று காலை சரியாக 9 மணியளவில் வெற்றிகரமாக வியாழனின் மேற்பரப்பில் நிலை நிறுத்தப்பட்டது, இதுவரை வியாழன் பற்றி மனிதர்கள் அறிந்திராத  பல்வேறு உண்மைகளை தனது இரண்டு ஆண்டு களில் வியாழனைச் சுற்றி வந்து கண்ட றிந்து 2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் வியாழனின் உள்ளே நுழைந்து அழிந்து போய்விடும். இந்த ஆய்வின் போது வியாழனின் காற்று மண்டலத்தில் உயிர் கள் வாழ்கிறதா என்பதையும் ஜூனோ ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.
நமது சூரியக் குடும்பத்தில் மிகவும் பெரிய கோள் வியாழன், வானியலைப் பற்றி அறிந்தவர்கள் வெற்றுக்கண் ணால் கூட வானில் கண்டுகளிக்கலாம். இதன் ஈர்ப்பு விசையின் ஆற்றலால் இதனைச் சுற்றி நூற்றுக்கணக்கான துணைக்கோள்கள்(நிலவுகள்) சுற்றிவருகின்றன.
இது மிகப்பெரிய வாயுக் கோளக மாகும், இந்த வாயுக்கோளகத்தில் அதிக அளவு அய்ட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற லகுவான வாயுக்கள் நிரம்பி யுள்ளது. கலிலியோவால் கண்டறியப் பட்ட இந்த வியாழன் கோள் சுமார் 200 ஆண்டுகளாக பல்வேறு வானியல் ஆய்வாளர்களால் சோதனை செய் யப்பட்டு வந்தது. 20-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் வான்வெளியில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளப்பட்ட போது அனைவரின் பார்வையும் வியாழன் கோளில் என்ன உள்ளது என்று தான் இருந்தது.
சனிக்கோளின் வளையங்களை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு ஓடம் காசினி 2001 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வியாழன் கோளுக்கு மிகவும் அருகில் சென்றது, அப்போது காசினியின் ஒளிப்படக் கருவி வியாழனில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சுழன்றுகொண்டு இருக்கும் மிகப்பெரிய  சூறாவளியை படம்பிடித்து அனுப்பியது. இந்தச் சுறாவளியின் அளவு நமது பூமியைவிட சிறிது  பெரியதாகும். இது வியாழனின் மேற்புரம் மஞ்சள் நிற சோப்புக் குமிழ் போல் சுற்றிக்கொண்டே  இருக்கிறது. மேலும் பல புதிய கோணத்தில் வியா ழன் கோளை படம் பிடித்து அனுப் பியது.
இந்தப் படங்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வியாழனை தனித்து அதன் சுற்று வட்டப்பாதையில் நின்று முழுமையாக ஆய்வுசெய்ய ஒரு திட்டத்தை முன் வைத்தது.
இதனை அடுத்து இதற்கென தனிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது, இந்தக் குழுவின் தலைவராக இத்தாலியைச் சேர்ந்த  கிழிநிமிளிலிணிஜிஜிகி சிளிஸிகிஞிமிழிமி ஆங்கி லிட்டோ கொரடினி என்பார் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே வானியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தன்னுடைய 14-ஆவது வயதில் வியாழனின் மாதிரியை உருவாக்கி அய்ரோப்பிய விண்வெளி ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்தார்.
அந்த மாதிரியை ஆய்வு செய்த குழுவினர் வியாழன் கோளும், இவரது மாதிரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதை கண்டு வியந்து இவரை லண்டனுக்கு அழைத்து கவுரவித்தனர். பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இவர் வியாழன் கோள் பற்றி மேலும் பல ஆய்வுகளைச் செய்து கொண்டு இருக்கும் போது நாசா தனது ஜூனோ ஆய்வுக்களத்திட்டத்தின் தலைவராக இவரை நியமித்தது.
இவரது தலைமையில் 62- ஆய்வாளர் குழு இயங்கியது. பல்வேறு விதங்களில் சோதனை செய்து 2009-ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம் தயாரானது. இந்த விண்கலத்தில் வியாழனை முதல் முதலில் கண்டறிந்த கலிலியோவின் புகைப்படமும், அதன் வெளிப்பகுதியில் அவரது கையெழுத்துப் படிவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலிட்டோ அவர்களின் விருப்பத் துடன் செய்யப்பட்டது,  ஜூனோ விண்கலத்தின் இறுதிப்பணிகள் நடந்து கொண்டு இருக்கும் போது உடல் நிலை நலிவுற்று அந்த திட்டத்தில் இருந்து தானே விலகிக் கொண்டார்.
அதன் பிறகு ஸ்கோட் போல்டன் தலைமையில் அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் அய்ந்து என்ற ராக்கெட்டின் மூலம் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அய்ந்தாம் நாள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.25 மணிக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது, சுமார் இரண்டு ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் துவக்க வேகத்தில் இருந்து அதிபட்ச வேகத்தில் சுற்ற ஆரம்பித்த ஜூனோ 2013-ஆம் ஆண்டு  மணிக்கு 266,000 கிலோமீட்டர் வேகத்தில் வியாழனை நோக்கி அனுப்பப்பட்டது,
சுற்றுவட்ட அதிகபட்ச வேகத்தின் காரணமாக எரிபொருளைப் பயன் படுத்தாமலேயே சுமார் 13 மாதங்கள் பயணித்து வியாழனின் ஈர்ப்பு வளை யத்திற்குள் நுழைந்தது, பிறகு இதனின் வேகத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவந்து நேற்றைய தினம் (ஜூலை 4ஆம் தேதி) இந்திய நேரப்படி ஜூலை அய்ந்தாம் தேதி காலை 9 மணி அய்ம்பது நிமிடத்தில் வியாழனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது. தான் சுற்றுவட்டப் பாதையில் நிலை நின்று விட்டதற்கான சமிக்கையை  இந்திய நேரப்படி சரியாக 11 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வாளர் களுக்கு அனுப்பியது.
வியாழனின் மேற்புரத்தைச் சுற்றி வரும் ஜூனோ அங்கிருந்து அக்கோ ளின் ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், போன்றவற்றை ஆய்வு செய்யும். அதே போல் வியாழனின் துணைக் கோள் களையும், வியாழனால் அந்தக் கோள் களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்ற வற்றை ஆய்வு செய்யும். மேலும் வியா ழன் எவ்வாறு தோன்றியது, வியாழனின் மேற்புரத்தில் உள்ள ஈரப்பதம் போன்ற வற்றை ஆய்வு செய்யும். இதன் மூலம் வியாழனின் உள்ள நீரின் அளவை அறிந்து கொள்ள பேருதவியாக இருக் கும். முழுக்க முழுக்க சூரிய ஒளியாற்றல் மற்றும் ஈர்ப்பு விசை, வீச்சுவிசை போன்ற ஆற்றல்கள் மூலம் இயக்கப் பட்ட முதல் ஆய்வுக்கலன் என்ற பெருமை யையும் இந்த ஜூனோ பெற்றுள்ளது.
வியாழன் என்பது முழுக்க முழுக்க வாயுவால் ஆன ஒரு கோள் ஆகும். பூமியை விட சுமார் 1300 மடங்கு பெரி யது. அதாவது நமது பூமியைப் போல் சுமார் 1300 பூமிகள் வியாழனில் அடங்கிவிடும். வியாழனின் மேற்பரப் பில் இடைவிடாது மின்னல் வெட்டிக் கொண்டே உள்ளது, இதனால் அங்கு மிகப்பெரிய ஆற்றல் மண்டலம் உள்ளது, ஆற்றல் மண்டலம் என்று ஒன்று இருக்குமானால் அதை பயன் படுத்தும் மூலகமும் இருக்கவேண்டும் என்ற இயற்பியல் விதிக்கு ஏற்ப வியாழனின் காற்று மண்டலத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப வாழும் உயிரிகள் இருக்கலாம் என்றும், இந்த உயிர்கள் மின்னலில் இருந்து வரும் ஆற்றலை தன்னுடைய உயிர்வாழ்க்கைக்கு பயன் படுத்தலாம் என்றும் ஸ்டீபன் ஹவுக் கின்ஸ் கூறியுள்ளார்.
நமது பூமியின் வாயு மண்டலத்தில் கூட பல்வேறு உயிர்கள் வாழ்கின்றன. ஆகவே வியாழனின் வளிமண்டலத்தில் உயிர்கள் இருக்காது என்று மறுப்புக் கூறவாய்ப்பில்லை. இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவே ஜூனோ அனுப்பபப்ட்டுள்ளது.
மூடநம்பிக்கைக்கு இனியாவது
முற்றுப்புள்ளி வையுங்கள்
இந்த நூற்றாண்டில் 2011 ஆம் ஆண் டிற்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4 நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்தியா ஏவிய சந்திரன் கலம் (சந்திரயான்), செவ்வாய் கலம்(மங்கள் யான்) போன்றவற்றுடன் 2006-ஆம் ஆண்டு அமெரிக்காவால் புளுட் டோவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு கடந்த ஆண்டு இதே மாதம் 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுட்டோவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த நியூஹரைசன் போன்ற விண்வெளிக் கலங்கள் வானத்தின் எல்லையை மேலும் விரிவாக்கிக் காட்டின, ஏற்க னவே வயோஜர் போன்ற விண்கலங்கள் சனிக்கோளையும், அதன்வளையங் களையும் நுணுக்கமாக ஆய்வு செய்து தகவல்களை படமாக பிடித்து நமது பார்வைக்கு அனுப்பி வைத்தன.
இவ்வளவு விண்ணியல் சாதனைகள் புரிந்த பிறகும் இன்றும் நமது நாட்டில் படித்தவர்கள் கூட குருப்பெயர்ச்சி பார்த்துக்கொண்டு தனது அடுத்த பணியை தீர்மானிப்பது ஜூனோ ஆய்வுக்குழுவினரின் உழைப்பை கேலி செய்வது போன்றதாகும்.
விடுதலை ஞாயிறு மலர், 9.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக