பக்கங்கள்

வியாழன், 6 செப்டம்பர், 2018

சமூக ஊடகங்களில் அம்பலமாகிய கேரள சோதிடரின் சோதிடப் புரட்டு

கொச்சி, செப்.5 கற்கட மாசம், ஜூலை  17 முதலே ஆகஸ்ட் ஒன்னாந்தேதி வரை மழை இருக்கப்போவதில்லை.நல்ல உஷ்ணம் ஜீவியுண்டாகும். ஆகஸ்ட் 1 முதல் செப்.17 வரை கொஞ்சம் மழை இருக்கும். செப்.1 முதல் அக்.11வரை தானியங்களுக்கு அனுகூலமாகும் விதத்தில் மழை இருக்கும். ஏனென்றால், அவிட வாயு கோபம். வாயு தாராளமாகி, கார்மேகங்கள் சின்னா பின்னம் ஆய்ப் போம். வன பருவதங்களில் கடந்த வருடங்களைப்போல்தான் மழை இருக்கும்.


வய்துதி உல்பாதனம் விதரனம் விபனனம்....


இப்படியாக மலையாள மொழி தொலைக்காட்சியில் சோதிடர் கேரளாவில் மழை நிலவரம் குறித்து ஏதோ கொஞ்சம் மழை பொழியும் என்றும், காற்று அதிதீவிரமாக அடித்து மேகத்தைக் கலைத்துவிடும் என்றெல்லாம் கூறி, கேட்கின்ற யாருக்குமே புரியக்கூடாது என்று சமஸ்கிருதத்திலும் ஏதேதோ அந்த சோதிடர் ஆருடம் கூறுகின்றார். ஆனால், நூற்றாண்டு காணாத மழை பொழியும், வெள்ளம் வாரிச்சுருட்டிச் செல்லும் என்று கூறவில்லை. எல்லாவற்றையும்விட, தன்னையே அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரையும் மீட்புக்குழுவினரே மீட்டனர்.

அந்த சோதிடர் தொலைக்காட்சியில்  சோதிடம் கூறுகின்ற காட்சிப்பதிவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதுடன், கேரளா வெள்ளத்தில், அதே சோதிடரை மீட்புக் குழுவினர் குண்டு கட்டாகத் தூக்கி வரும் காட்சிப் பதிவையும் வெளியிட்டு, சோதிடம் என்பது எவ்வளவு பெரிய புளுகுமூட்டை என்பதை மீம்ஸ்கள்மூலம் தோலுரித்துள்ளனர்.

கீழ்க்கண்டவாறு அந்த காட்சிப் பதிவு, படத்துடன்  தகவலைப் பதிவேற்றி பகிர்ந்து வருகின்றனர்.

மலையாள ஜோதிடர்...


இந்த ஆண்டு அதிக மழை இருக்காது, வெப்பம் தாக்கும்..! என டிவியில் பேட்டி கொடுத்தவர்



நேற்று அதே சானல் மறு ஒளிபரப்பாக வெளியிட்டு ஜோதிடத்தால் அவரையே காப்பாற்ற முடியவில்லை என வெள்ளத்தில் அவரை காப்பாற்றி தூக்கிவரும் புகைப் படத்தையும் வெளியிட்டது...!!



-  விடுதலை நாளேடு, 5.9.18

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இறந்து விடுவாய் என பொய் ஆருடம்: ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்


சீனாவில் சிசுவான் மாகாணம் மியான் யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங் , கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்தார்.
அப்போது வாங் 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என் ஆரூடம் கூறினார். அதை உண்மை என அவர் நம்பினார். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்தார்.

ஆனால் அவர் “நல்ல உ ட ல் ந ல த் து ட ன். ஆரோக்கியமாக இருக்கிறார், இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றார்.

ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கினார், சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை  நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.
தகவல்: கு.பஞ்சாட்சரம், 
திருவண்ணாமலை

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

புதன், 28 மார்ச், 2018

நூல்:     அறிவோம் ஜோதிடம்!!!

நூல்:     அறிவோம் ஜோதிடம்!!!


ஆசிரியர்: வணிகவியல் வரலாற்றுமாமணி               சி.லோகநாதன்


வெளியீடு: கோல்டன் கிங், 2/11, முல்லைத்தெரு,                    ஜவஹர் நகர், திருச்சிற்றம்பலம், வானூர்,           விழுப்புரம் மாவட்டம் - 605111. 
       கைப்பேசி: +91 9659299095


மின் அஞ்சல்:     arivomjothidam@gmail.com


பக்கங்கள்: 274,     விலை: ரூ.180/-


 




 


ஜோதிடக் கலை முறைக்கும் உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகள்:


ஜோதிடக்கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாட்டு வினாக்கள் கீழ்வருமாறு


1.    கிரகங்களின் சுழற்சி முறை வட்டப்பாதையா அல்லது நீள் வட்டப்பாதையா?

2.    ராகு, கேது கிரகங்கள் இல்லாமல் ஜோதிட அமைப்பு எப்படி?

3.    ஜோதிடக் கலையில் 27 நட்சத்திரங்களுக்கு மட்டும் உள்ள முக்கியத்துவம் எதனால்?

4.    கிரகங்களின் சுழற்சி வளையத்தில் சூரியன் மையமா? பூமி மையமா?





5.    ஜோதிடக்கலை என்பது பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்குமா? அல்லது மனித இனத்திற்கு மட்டுமா?


6.    பரிகாரங்களால் கிரகங்களின் செல்வாக்கையும், ஜோதிடக்கலை பலன்களையும் மாற்ற முடியுமா?


7.    ஜாதக ராசிக்கட்டத்தில் சூரியன் ஒவ்வொரு வீடாகச் செல்வதும், அதன் பார்வை மற்ற கிரகங்களுக்கு மாறுவதும் எப்படி?

8.    ஜாதக ராசிக் கட்டங்கள் நம் நாட்டு அமைப்பில் தமிழகத்திற்கும், மற்ற மாநிலத்திற்கும் வேறுபடுவது எதனால்?

9.    ஜோதிடக் கலையில் தசாபுத்தியின் காலக்கணக்கீட்டில், ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமா?
10.    ஒரே நேரத்தில் (லக்கனத்தில்) பிறந்த அனைவருக்கும் ஒரே பலன் இல்லாதது ஏன்?

11.    ஆண், பெண் என்பதால் ஜனன நேரங்கள் ஜோதிடக்கலை கணக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்துவது ஏன்?


12.    சூரிய உதய நேரத்தில் உள்ள வித்தியாசம் ஏன்?


13.    நாட்களின் ஆரம்பம் இரவு 12 மணியா? அல்லது சூரிய உதய நேரமா?


14.    ராகு காலம், எமகண்ட நேரங்கள் இடத்திற்கு இடம் வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஏன்?


15.    வருடப் பிறப்பு, மாதப் பிறப்பு நாட்கள் இந்தியாவின் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவது எப்படி?


16.    ஜோதிடக்கலை காலக் குறியீட்டிற்கும், நி.வி.ஜி.  மற்றும் மி.ஷி.ஜி.  காலக் குறியீட்டிற்கும் வேறுபாடு உண்டாவது ஏன்?


17.    ஜோதிடக்கலையில் ஜாதகரின் பிறந்த நேரம் (லக்கினம்) குறிப்பது குழந்தையின் தலைப்பகுதி தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் கணமா? முழு உறுப்புகள் வெளிவரும் நேரமா? அல்லது மருத்துவர் அறிவிக்கும் காலமா?


18.    அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகப்பலன் உண்டா?


19.    நவீன ஜோதிடர்கள், குழந்தைப் பிறப்பு என்பது கருமுட்டை உண்டான நேரம் என்று கணிப்பது சரியா?


20.    ருது கால ஜாதகத்தின் அடிப்படையில் பெண்களின் திருமணப் பொருத்தம், செவ்வாய் தோஷம் கண்டு அறிவதில் உள்ள முரண்பாடு?


21.    ஜோதிடக் கலையில் ஆயுள்பலம் கணிக்க முடியுமெனில் திடீர் மரணம் எப்படி?


22.    ஜோதிடக்கலையில் குறிப்பிட்டபடி எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்குமானால், ஜாதகரின் மதி, உழைப்பு மற்றும் அவன் செய்யும் குற்றச் செயலுக்கான தண்டனைச் சட்டங்கள் எதற்கு?


23.    ஜோதிடரின் கருத்துகள் உண்மைபோல் தோன்றக் காரணங்கள் எவை?


24.    ஜோதிடக்கலை சூத்திரங்கள் பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனில் இப்போது உள்ள வளர்ச்சியடைந்த மனித வாழ்க்கை முறைக்கு இது பொருந்துமா?
இவ்வாறு உள்ள 24 வினாக்களுக்குக் கீழ்க்கண்டவாறு ஜோதிடக் கலை முறைக்கும், உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கமாகக் காண்போம்.

-  உண்மை இதழ், 1-15.3.18