பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2016

ஜோதிடம் புரியாத புதிரா?

நான் பெரும்பாலும் புத்தகங்களைப் படிப்பவன், நான் ஒரு புத்தக வியாபாரி. புத்தகங்களைப் படித்து, புரிந்து, அதை விமர்சனம் செய்பவன்.

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது.

ஒரு இடதுசாரி சிந்தனை உள்ளவர், மார்க்சியத்தில் பரிச்சயம், பெரியாரை நேசித்தவர். இயற்கையின் செயல்பாடு களைப் பேசக் கூடியவர் அப்படிப்பட்ட ஒருவர்  சோதிட கலையை ஓர் ஆய்வு செய்து, மக்கள் ஜோதிடத்தை நம்பக்கூடிய அளவில் எழுதியுள்ளார்.

யார் யாரையோ துணைக்கு அழைத்துள்ளார் மார்க்சியவாதிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் நடந்ததாக கூறி அத்த னையையும் நம்பும் ராஜேஷ் எல் லோரையும் நம்பச் சொல்கிறார்.

ஒரு கட்டுரை எழுதிவிட்டு கடைசியில் பல கேள்வி போட்டு விக்கிரமாதித்தன் கதையில் வேதாளத்தை சுமந்து செல்லும் விக்கிரமாதித்தன் நிலையில் ராஜேஷ் உள்ளார். அது கூட கதையில் ஒரு கருத்து இருந்தது.

அவர்கள் எழுதியதை கலைஞானம் என்பவர் ராஜேஷ் சோதிடக் கலையை உயர்த்தி வருகிறார் என்று பாராட்டி யுள்ளார்.

எனக்கு தெரிந்த ஒரு மார்க்சியவாதி, பெரியாரின் கொள்கையில் இளம் வயதில் வாழ்நாளைக் கழித்து ஆசிரியராகப் பரிணமித்து, குறிப்பிட்ட காலத்தில் சோதிடம் பார்க்கும் தொழிலைத் தேர்வு செய்து வாழ்கின்றார். சங்கரன் கோவில் அருகே குருவிகுளம் அதன் அருகே ராமலிங்காபுரம் கிராமத்தில் ஓகோ என்று தொழில் ஓடுகிறது.

சோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஏன் இங்கு வருகிறீர்கள். நாடு எப்படி உருப்படும் என்ற வார்த்தைகளால் அர்ச் சனை செய்து ஜோதிடத்தை சொல்லு கிறார். அவர் பெயர் தேவதாசன்.

எப்படி சப்தம் போட்டாலும் நீங்கள் சொல்வது எங்களுக்கு நடக்கிறது என்று சொல்லி மக்கள் பெருமையோடு பேசுகிறார்கள்.

தேவதாசன் சார் இளவயதில் பெரியார் கொள்கையில் ஈர்த்து பல எதிர்ப்புகளில் வாழ்ந்த ஓர் மாமனிதர். யாரிடமும் ஜோதி டம் பாருங்கள் என்று கூறியதில்லை. வந்த மக்களை நம்பிக்கையோடு தேற்றி அனுப் புகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.

இதைக்கூட தொலைபேசியில் அனு மதி பெற்றுத்தான் எழுதுகிறேன், வாழ்த் துக்கள் கூறினார். கஷ்டமான வாழ்வு தொடங்கும் போது மக்கள் ஜோதிடத்தை நம்புவதும், குருவி ஜோசியத்தை நம்புவதும், இரவு நேரங்களில் குறி சொல்லும் கோடாங்கி காரர்கள் கையில் பிரம்பு வைத்துக் கொண்டும் குறி சொல்வதை நம்புவதும் அதை தொழில் செய்பவர்கள் பரிகாரம் என்ற பெயரில் பல ரூபாய்களை பிடுங்கிச் செல்வதும் வாடிக்கை.

ஊருக்கு ஜோதிடம் சொல்லும் மக் களுக்கு அவர்களை பிழைப்பு நிலையை யோசிப்பதில்லை. அதைக் கேட்டால் முன் செய்த பலனால் இந்த நிலை என்று கூறி அதற்கு ஓர் காரணம்.

நாடித்துடிப்பை வைத்து மருத்துவம் பார்த்த வைத்தியம் தான் சிறப்பாக இருந்தது. அது நாடி துடிப்பை வைத்துக் கூட கணக்கிடலாம்.

பிறந்த தேதி, நேரம் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. குழந்தை தாய் வயிற்றிலிருந்து பூமியில் விழும் போது அந்த பரபரப்பில் நேரம் சரியாக கணிக்க முடியாது. டாக்டர்கள் கூட 5 நிமிடம் 10 நிமிடம் கழித்துத் தான் சொல்வார்கள்.

இதை எப்படி சோதிடமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? நடிகர் ராஜேஷ் நடிகராகவே இருந்திருக்கலாம். இந்த ஆய்வுக்குள் வந்தது யாரைக் காப்பாற்ற என்று தெரியவில்லை.

பிராமணர்கள் மந்திரம் என்ற பெயரில் எல்லா மக்களையும் ஏமாற்றுகிறார்கள். அவர்கள் வலிய வந்து என்னை அழையுங்கள் என்று கூறவில்லை.

எவ்வளவு படித்திருந்தாலும் கல் யாணம், இழவு, கும்பாபிசேகம், இறந்த தாய், தகப்பனார்களை மேலோகம் அனுப்ப எவ்வளவு பணம் கொடுத்து அனுப்புகிறார்கள்! உலகத்தில் 90% மூட நம்பிக்கையில் உழன்று வாழ்வதைக் காணுகின்றோம்.

ஒரு பாடல் உண்டு

தலையெழுத்து, தலைஎழுத்து என்று சொல்லி தத்தளிக்கிறார்,
கடும் உழைப்பைக் கூட தலைவிதி என எண்ணி
செயல் படுகின்ற மாமேதைகளைப் பற்றி என்ன சொல்வது?
ராஜேஷ் முன்னுரையில் ஒன்னுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்று கவிஞர் சந்தானத்தின் பாடலை நினைவு கூர்கிறார்.

அதை சந்திரபாபு பாடியுள்ளார்.

இது ஓர் படத்தின் சூழ்நிலைக்கு கவிஞர் எழுதியுள்ளார். இதுவே நிஜமாக ஆகிவிடுமா?

பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலை விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறனும் இது அவர் வாழ்க்கையில் ஒத்துவரவில்லை என்று எழுதியுள்ளார்.

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

என்ற பாடல் வரிகள் இன்றும் மக்கள் மனதில் பதிந்து விட்ட பாடல்.

இப்படி எழுதியவர் 29ஆம் வயதிலே ஏன் மறைந்தார்? விதியின் அடிப் படையிலா என்று எழுதியதைப் பார்த்து தான் குருட்டு தனமாக நம்பினால் எல் லோரும் நம்ப வேண்டும் என்ற பிற் போக்கான சிந்தனை தவிர, உயர்ந்த சிந்தனை இல்லை.

என் வாழ்க்கையில் நடந்த ஓர் நிகழ்வைக் கூறுகிறேன். என் கல்யாணத் திற்கு பெண் பார்க்கையில் ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.  ஓர் தீவிரமான பொதுவுடைமையாள னாகிய நான் மறுத்து விடவில்லை.

கடைசியில் நானும் எனது மைத்துனர் ராமச்சந்திரனும் ஊரின் அருகிலுள்ள சேர்ந்த மரத்தில் பார்க்கச் சென்றோம்.

சோதிடர் பலனைப் பார்த்து ஐந்து பொருத்தந்தான். சரி; இது பொருத்த மில்லை என்று கூறிவிட்டார்.

நானும் என் மைத்துனரும் ஆலோ சித்து வீட்டில் போய் எட்டுப் பொருத்தம் என்று பொய் சொல்வோம் என்று பேசி, சொல்லி கல்யாணம் நடைபெற்றது. சிறிது காலம் என் நடைமுறையில் சில கஷ்டம். நான் மக்கள் பணிக்காக சிறை சென்றேன்.

குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு நான் வாழ்க் கையைப் புரிந்து நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, நல்ல மருமக்கள்மார், நல்ல பேரப்பிள்ளைகள், என் மாதி கொடுத்து வைத்தவன் யாரும் இல்லை என்பது போல  வாழ்கிறேன். நான் சைக்கிளில் சென்று 73 வயதில் சுமார் 80 கிலோ மீட்டலிரிந்து 120 கிலோ மீட்டர் பயணம் செய்து சாதனை புரிகிறேன்.

திணமனி, தி இந்து, சிவப்பு சட்டைத் தாத்தா, புத்தகத் தாத்தா என்று பாராட்டு கிறது.

மானமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி கையினால்  ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் புத்தக விழாவில் புத்தகர் விருது அதிலும் மூன்று பொதுவுடைமைத் தோழர்கள் வாங்கியுள்ளோம். நான் பிறந்த பலனை அனுபவிக்கின்றேன். ஜாதி இல்லை, கடவுள் இல்லை என்று பள்ளி களில் பிள்ளைகளிடம் உரக்க கூறுகிறேன்.

மாதா, பிதா, குரு தான் தெய்வம் என்று பள்ளி பிஞ்சு உள்ளங்களில் கூறி வருகின்றேன்.

உலகத்தில் எந்த விதமான கவலை இல்லாமல் சைக்கிளில் பவனி வருகின் றேன். உடலில் நோயும் இல்லை. மன நிம்மதி, பல புத்தகங்களைப் படிக்கின் றேன் பகுத்தறிவுவாதியாக வாழ் கின்றேன்.

என்னை மனிதனாக்கியது மார்க்சியம்

சிந்திக்க வைத்தது திருக்குறள்

ஜாதி, மதம், கடவுள் இல்லை என்று பெரியாரிசம் சொல்ல வைக்கிறது.

நல்லவர்களைக் தொடுங்கள்! நல்ல பலன் கிடைக்கும்

ஜீவாவை தொட்டேன் எல்லோராலும் பாராட்டப் படுகின்றேன்.

உறுதியான லட்சியம், மன தைரியம் தான் வாழ்வதற்கு ஓர் மா மருந்து, எடுத்த முடிவில் பின் வாங்கக்கூடாது. நல்ல முடிவாக இருக்க வேண்டும். கடவுளை நம்புகிறவர்கள் நிம்மதியாக இருந்ததாக சரித்திரம் இல்லை. நம்பாத நான் திருப்தியாக இருக்கிறேன். யாருக்கும் வஞ்சகம், துரோகம் எண்ணாத என்னை கடவுள் என்று இருந்தால் என்னை நேசிப்பாரே தவிர, என்னைச் சோதிக்க மாட்டார்.

- தோழர் இரா.சண்முகவேல்
நெல்லை மாவட்டம் - 627860

-விடுதலை,31.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக