பக்கங்கள்

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இறந்து விடுவாய் என பொய் ஆருடம்: ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்


சீனாவில் சிசுவான் மாகாணம் மியான் யங் பகுதியை சேர்ந்த 70 வயது பெண் வாங் , கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்தார்.
அப்போது வாங் 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என் ஆரூடம் கூறினார். அதை உண்மை என அவர் நம்பினார். ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்தார்.

ஆனால் அவர் “நல்ல உ ட ல் ந ல த் து ட ன். ஆரோக்கியமாக இருக்கிறார், இந்த நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றார்.

ஜோதிடரை சந்தித்து அவர் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரைமட்டமாக்கினார், சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை  நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.
தகவல்: கு.பஞ்சாட்சரம், 
திருவண்ணாமலை

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18