பக்கங்கள்

வியாழன், 10 டிசம்பர், 2015

ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

பலே, பலே, பாராட்டத்தக்க முடிவு
ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு கருநாடகாவில் தடை

கருநாடக முதல்வர் சித்தாராமய்யா அறிவிப்பு

பெங்களூரு, டிச.10_ கருநாடக மாநிலத்தில் தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகள் வாயிலாக  அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை கள் மக்களிடையே பரவி வருகின்றன. அதற்கு முடிவு கட்டும்வகையில் அம்மாநில அரசு திட்ட மிட்டு வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஜோதிட நிகழ்ச்சிகளின் மூலமாக  மக்கள்  மூடநம் பிக்கைகளுக்கு அடிமையா வதை அறிந்து, கடவுள் கவலையற்றவராக அறி யப்பட்ட முதலமைச்சர் சித்தாராமய்யா அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை செய்ய முன்வந்துள்ளார்.  மாநிலத்தில் ஏற்கெனவே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவரும்வகையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், ஜோ திடம் சார்ந்த தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் கவ லைக்குரியனவாக உள்ளன. ஆட்சேபத்துக்குரிய கருத் துகளைக் கூறுவதும், அதன்மூலம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதும் பரவி வருகின்றன. தொடக்கத் தில் ராசியைக் கேட்டு அதற்கு இலவசமாக ஜோதிடத்தை கூறிவந் தார்கள். இப்போது தொலைக்காட்சி அலை வரிசைகளின் டிஆர்பி ரேட் என்கிற நிகழ்ச்சி பார்வையாளர்கள் எண் ணிக்கையைப் பெருக்கு வதற்காக இயற்கை அழி வுகள், சந்தனக் கடத்தல்கள், அரசியல் வாய்ப்புகள் உள்ளிட்ட பலவற்றை இணைத்துக்கொண்டார்கள். அண்மைக்கால நிகழ்வு களை, பிரச்சினைகளை இணைத்துக்கொண்டு நிகழ்ச்சியை ஜோதிடத்தின் அடிப்டையில் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதுபோன்ற ஜோதிடத் தின் அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மக்களை அறிவியலுக்கும், அறிவுக் கும் புறம்பான  வாழ்வுக்கு வழிகாட்டுபவையாக அமைந்துவிடுகின்றன. 2005ஆம் ஆண்டுகளில் ஆறு தொலைக்காட்சி அலைவரிசைகளாக இருந்தவை இப்போது 20 தொலைக்காட்சி அலை வரிசைகளாக இயங்கி வருகின்றன. அவற்றில் சில காலை 6 மணிமுதல் காலை 10.30 மணி முடிய அலைவரிசை ஒளிபரப்பை ஜோதிடர்களிடம் விற் பனை செய்துள்ளன. புகழ் மற்றும் பணம் பெறுவ தற்காக செய்ய வேண்டிய கணிப்புகளைக் கூறுவது, பூஜைகள்குறித்து விளக் குவது என்று அந்த நிகழ்ச் சிகள் இருக்கின்றன என்றார்.
பேராசிரியர் கே.எஸ்.பகவான்
பேராசிரியர் கே.எஸ். பகவான் கூறுகையில், ஜோதிடர்கள் ஜோதிடவி யலை, வானவியல் என்றும் அறிவியல் என்றும் கூறி வருகிறார்கள். சமூகத்தில் மக்களிடையே உள்ள பல்வேறு நிலைகளைக் கொண்டு அதனடிப்படை யில் ஜோதிடர்கள் கணிப் புகளைக் கூறி உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்ப டுத்துகிறார்கள்.  எந்த ஜோதிடராவது சென்னை வெள்ளம்குறித்து கூறி னாரா? ஜோதிடத்தை அரசு தடை செய்வது சரி யானதே. நான் முழுமை யாக ஆதரிக்கிறேன்.
கே.எஸ். சிவராமு
கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டவர்கள் நல அமைப்பின் தலைவர் கே.எஸ். சிவராமு கூறு கையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் எப்படியாவது நல்ல நிலை ஏற்படுமா? என்று ஜோதி டர்களை நாடுகிறார்கள். ஆகவேதான் அவர்களில் பலரும் அதுபோன்ற ஜோதிட நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். ஆனால்,  பல தகவல்களின் அடிப் படையில் ஜோதிடம் என்பது ஓர் ஏமாற்று வேலை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதிலும் வருத்தத்துக்குரியது என்ன வெனில், பெண்கள் உட் பட ஏராளமானவர்கள் அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுடன், ஜோதி டர்கள் கூறுவதை கண் மூடித்தனமாக பின்பற் றுகிறார்கள் என்பதுதான்.
கே.என்.சோமாயாஜி
ஜோதிடராக உள்ள கே.என்.சோமாயாஜி என்பவர் கூறுகையில், நான் முதல்வரின் முடிவை பாராட்டுகிறேன். தாங் களாகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள் பவர்கள் தொலைக் காட்சி களின்  மூலமாக மக்களை மோசமாக வழிநடத்து கிறார்கள். ஜோதிடத்தால் உறுதியாக எதையும் கூறமுடியாது. மாறிமாறி நிகழ்பவற்றை கூறும். வேத அறிவியல் சிலரால் தவ றாகப் பயன்படுத்தப்படு கிறது.  ஜோதிடத்தின்மூல மாக தளர்ச்சியடைந்த ஒருவரை ஊக்கப்படுத்த லாமே தவிர ஊழை மாற்ற முடியாது. தொலைக்காட்சி களும்கூட எளிதில் ஏமாறக் கூடிய மக்களை மேலும் முட்டாளாக்குகின்றன என்பதுதான் கெட்ட வாய்ப்பாகும் என்றார்.
நிரஞ்சன் பாபு
ஜோதிடம்சார்ந்த இணைய பத்திரிகையாசிரி யர் நிரஞ்சன் பாபு என்பவர் கூறுகையில், 5000 ஆண்டு களாக ஜோதிடம் இருந்து வருகிறது. இந்த தடையை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில், ஜோதிடத்தை கடைப்பிடிப்பதற்கும் தடை என்று விரிவுபடுத்தக் கூடாது. தொலைக்காட்சி களில் ஜோதிடர்களின் கணிப்புகள், ஆடை அலங் காரங்கள், தலையிலிருந்து உடல்முழுவதும் கண்ணைப் பறிக்கும்படியாக ஜொலிக் கின்ற நகைககள் ஆகியவை வேடிக்கையாக இருக்கின் றன. இயற்கை பேரிடர் கள்குறித்த கணிப்பில் மக்களிடம் அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள். மக்களை ஜோதிட தொலைக் காட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று குறிப்பிட்டார்.
5000 முதல் 50000 அறுவடை
நகரில் உள்ள பிரபல மான ரத்தினக்கல் வியா பாரி ஒருவர் கூறுகையில், வாரத்தில் இரண்டு முதல் மூன்று பேர் எங்களிடம் வருகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஜோதிடர்கள் கூறுகின்ற கல்குறித்து கேட் கிறார்கள். இதுபோன்ற வாடிக்கையாளர்களில் பிரபலமான நட்சத் திரங்கள், அரசியல் வாதிகள் வருகிறார்கள். தொலைக்காட்சிகளின் மூலமாக இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் கூறப் பட்டாலும், நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த நிமிடத் திலேயே அவர்களிட மிருந்து ஆலோசனைக் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
வரவேற்பு
அடிப்படையே இல் லாத போலியான கணிப்பு களை வழங்கும் ஜோதி டம் சார்ந்த நிகழ்ச்சி களுக்கு தடைபோடக் கூடிய அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களை உளவியல்ரீதியில் அச்சமூட்டி, பார்வையா ளர்களிடம் பின்னர் அதற்கான தீர்வுகளைக் கூறுவதாக கூறுகின்றன. இந்த நிகழ்ச்சிகள்மூலமாக ஜோதிடர்களாக கூறிக் கொள்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு பணம் கொழிக்கின்றது. இந் நிகழ்ச்சிகளை தடைசெய்ய அரசு எடுத்துள்ள முடிவு  பாராட்டுக்குரியது. பார பட்சமின்றி இதைக் கண்டிப்பாக செய்திடவும் வேண்டும். மூடநம்பிக் கைக்கு எதிரான சட் டத்தைக் கொண்டு வரு வதற்கான ஒளிக்கீற்றாக இது அமையும். சிலர் இதில் குழப்பம் விளை விக்கும் கருத்துகளை கூறினாலும், தளர்ந்திடக் கூடாது. எவ்வித பாரபட்ச மும் இன்றி, அரசியல் கண்ணோட்டமின்றி, சிறு பான்மையர் வாக்குவங்கி நோக்கமின்றி அமைந்திட வேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து வெளியிட்டுள்ளது.
-விடுதலை,10.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக