பக்கங்கள்

செவ்வாய், 16 மே, 2017

ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் அண்டப் புளுகு! சடங்குமூலம் சிறந்த குழந்தைகளை உருவாக்குகிறார்களாம்! கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை



கொல்கத்தா, மே 15 ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ எனும் அமைப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நல்ல குழந்தைகளைப் பெற்றிடலாம் என்றும், அதற்கான பயிற்சி அளிக்கப்போகிறோம் என்றும் கூறி மக்களிடையே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.

நல்ல குழந்தைகள் பிறக்க  பெற்றோர்களாக உள்ள எவரும் எதையும் செய்ய முன்வருவார்கள் என்கிற தன்மையை இந்துத்துவா வியாபாரத்தின் மூலதனமாக்கும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் கருவி களைக் கொண்டும், முறையான மருத்துவர்களைக் கொண்டும் சிகிச்சை அளித்து, நோயின்றி வாழும் தடுப்பு முறைகளைக் கூறப்போகிறதோ என்று எவரும் தவறாக எண்ண வேண்டியதில்லை.

எப்போதும்போல், அதன் பிற்போக்குத்த னங்கள், அண்டப்புளுகு மூட்டைகளைக் கொண்டு, பழைமையான இந்து மத சடங்குகளின் பெயரால் சிறந்த குழந்தைகளை உருவாக்கிட பயிற்சி அளிக்கப்போகிறோம் என்று மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது. நீதிமன்றம் அதற்கு தடை விதித்ததுடன், கட்டிய பணத்தை உரியவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் சார்பில் இந்நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தில், முற்றிலும் பழைமையான இந்து சடங்குகளின்மூலமாக பார்ப்பதற்கு அழகான நல்ல குழந்தை, ஆண் குழந்தை, சாதிக்கும் குழந்தைகளைப் பெறலாம், குழந்தைகளை வடிவமைத்துக் கொடுக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதி இடம்பெற்றுள்ள தெற்கு கொல்கத்தாவில் பவானிபூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ எனும் பெயரிலான வேலைத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அவ்வமைப்பு கருவில் உள்ள குழந்தைகள் குறித்ததகவல்களை,கருவிலுள்ளசிசுவின் தன்மைகள் குறித்து (இந்துமத சடங்குகளின் மூலமாக) வெளிப்படுத்துவதற்கு தம்பதிக்கு ரூ.500வீதம் கட்டணமும் வசூலித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதியின் ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்ட விழாவை எதிர்த்து  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான ஆரோக்ய பாரதி, ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற திட் டத்தை  செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி கருவில் சிசுவின் தன்மைகள்குறித்து கண்டறிந்து ‘சூப்பர் குழந்தைகளை’ உருவாக்குவ தற்காக, குழந்தைக்கான கருவை சுமக்கின்ற பெற்றோரிடமிருந்துகட்டணமாகரூ.500பெற்றுக் கொண்டு, கருவில் உள்ள சிசுகுறித்த ரகசிய தகவல்களை (இந்து மத சடங்குகள் மூலமாக)  ஆரோக்ய பாரதி எனும் அவ்வமைப்பு வெளி யிடும் என்று கூறுகிறது.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் சொற்பொழிவாற்ற ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் வருகைப்பேராசிரியர்டாக்டர்கரிஷ்மாநார்வின் என்பவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்குச் சென்றுள்ளார்.

‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ செயல் திட்டம் என்கிற பெயரில் கருவில் குழந்தைகளை உரு வாக்குவதன் மூலமாக  அறிவார்ந்த குழந்தைகளை உருவாக்க முடியும் என்று குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் ஹிதேஷ் ஜானி என்பவர் கூறுகிறார்.

ஆரோக்ய பாரதி அமைப்பின்சார்பில், கருவில் கண்காணிக்கும் சிசுக்களை (பழைமையான இந்து மத சடங்குகளின் வாயிலாக) ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’ என்கிற  திட்டத்தை அறிந்த கொல்கத்தா மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம்

இத்திட்டத்தை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமானது என்று குறிப்பிட்டு, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் கடந்த 5.5.2017 அன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டைநோக்கி கல்வீச்சு

இந்து மதத்தில் உள்ள கற்பனைக் கதைகளைக் கொண்டு  வலிமையான நல்ல குழந்தையைப் பெறுவது  எப்படி என்பதை கற்பிப்பதுதான் ‘கர்ப் சன்ஸ்கார் மேளா’வின் நோக்கமாக உள்ளதாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்-.எஸ்-. கிளை அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் செயல்திட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிய தையடுத்து, அத்திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசின் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்ததால்,  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டைநோக்கி கல்வீச்சு நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில்ஈகல் பாபன் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-. ஆரோக்ய பாரதி அமைப்பின் ஊனத்தை ஒழிப்பது என்கிற திட்டத்தின்படி, தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப்படக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஆரோக்ய பாரதியின் செயல் திட்ட விளக்கக் கூட்டத்தை நடத்த அனுமதித்து, அதைப்பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரோக்ய பாரதி அமைப்பின் வழக்குரைஞர் பிரனாப் கோஷ் நீதிமன்ற உத்தரவை பின்பற்று வதாக கூறியுள்ளார். ஆரோக்ய பாரதியின் திட் டத்தில் 150 இணையர் சிகிச்சைக்கு பதிவு செய் துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களைக் கொண்டு தம்பதியருக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை என ‘கர்ப் சன்ஸ்கார்’ நிகழ்வை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனன்யா சக்ரபோர்த்தி கூறும்போது,

“இது (நீதிமன்றத்தின் கண்டனம்) குழந்தை களின் உரிமைகள் மற்றும் அறிவியலுக்கான வெற்றியாகும். அவர்கள் நடத்துகின்ற நிகழ்வானது குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தம்பதியரை முற்றிலும் அறிவியலுக்கு மாறாகவும், பிற்போக் குத்தனமாகவும் வழிநடத்துவதாக உள்ளது..

இதுபோன்ற அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்குத்தனமானபாகுபாடானதுகுழந் தைகள் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல் லாமல், பிஎன்டிடி சட்டத்தின்படி சட்ட விரோத மானதுமாகும்’’ என்றார்.

இவ்வழக்கில் ஆரோக்யா பாரதி  அமைப்பின் வழக்குரைஞர் பிரோசி எடுல்ஜி  கூறும்போது,

‘‘குழந்தை பிறப்பில் பல்வேறு கலாச்சாரங் களுடன் பலவிதமான சடங்குகள் உள்ளன. அவற்றை பாதுகாத்திட வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஏராளமான கலாச்சார சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன’’ என்றார்.

கட்டணத் தொகையை திருப்பியளிக்க உத்தரவு

இரண்டு நாள்கள் பயிற்சிக்காக 150 தம்பதி யரிடமிருந்தும் கட்டணமாகப் பெறப்பட்ட தலா ரூ.500 தொகையை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநில ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஜிஷ்ணு போஸ் கூறும்போது,

‘‘நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் மதிப்பளித்து, பேராசிரியர் நர்வானியின் சொற்பொழிவைப் பதிவு செய்து, அக்காட்சிப்பதிவை நீதிமன்றத்திடம் அளிப்போம்’’ என்றார்.

சமூக கட்டமைப்பை

சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.

திரிணமுல் காங்.அமைச்சர்

பார்த்தா சட்டர்ஜி சாடல்

ஆர்.எஸ்.எஸ்-.சின் இதுபோன்ற செயல்பாடு களைக் கண்டித்துள்ள அனைத்திந்திய திரிணமுல் காங்கிரசு கட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்துக்கான நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, “நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் வர வேற்கிறோம். மாநிலத்தில் சமூக கட்டமைப்பை சீர்குலைத்திட ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. அதனால்தான், கிடைக்கின்ற அனைத்து வாய்ப் புகளிலும் மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி, அறிவியலுக்கு புறம்பானவற்றை ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.

மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதோ ஆர்.எஸ்.எஸ்.சின்அரசியல்கட்சியாகஉள்ள பாஜக. நாடுமுழுவதற்கும் முறையாக செயல் படுத்தவேண்டிய திட்டங்களை செயல்படுத்த முனையாமல், பாஜக ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் ஒன்றாக உள்ள மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தலுக்காக அம்மாநில மக்களின் வாக்குகளை முன்னிறுத்தி, ‘கர்ப் சன்ஸ்கார்’ திட்டத்தை விளம்பர நோக்கத்துடன் மட்டுமல்லாமல், இந்துத்துவத்தை திணித்து மக்களைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  ஆர்.எஸ்.எஸ்- கிளை அமைப்பாக, மருத்துவ அமைப்பாக உள்ள ‘ஆரோக்ய பாரதியை’ செயல்படுத்த முனைப்பு காட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு

‘‘ஆரோக்யபாரதிஅமைப்பின்சார்பில் வார இறுதி நாள்களில் இரண்டுகூட்டங் கள்நடத்தப்பட்டுள்ளன.இதுவரை எந்த தம்பதி யரிடமும் சிகிச்சை மேற்கொள்ளப் படவில்லை. மேலும் பெற்றப் பணத்தைத் திருப்பி அளிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது மூடத்தனத்துக்கு எதிராக அறிவியலுக்குக் கிடைத்துள்ள வெற்றி’’ என்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி கூறுகிறார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டியுள்ளது. வெட்ககரமான, மானக்கேடான, ஆணாதிக்க, பெண்ணின வெறுப்பு கொண்ட, அறிவியலுக்குப்புறம்பான செயலாக ‘ஆரோக்ய பாரதி’ அமைப்பின் கர்ப் சன்ஸ்கார் விழாவுக்கு எதிராக கொல்கத்தாவில் மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் முயற்சியால்  வெற்றி கிடைத்துள்ளது என்று நீதிமன்றத்தீர்ப்பை வரவேற்கும் பதிவுகள் பரவியவண்ணம் உள்ளன.
-விடுதலை,15.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக